Reading Time: < 1 minute

கனடா – மார்க்கமில் உள்ள ஒரு உணவகத்தில் உணவருந்திய பலர் கடுமையாக நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் சேர்த்த சம்பவம் குறித்து யோர்க் பிராந்திய பொது சுகாதாரம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

மார்க்கம் சாலை மற்றும் காசில்மோர் உள்ள டிலைட் ரெஸ்டாரன்ட் & BBQ உணவனம் தற்போது ஆய்வு செய்யப்படுவதாக யோர்க் பிராந்தியத்தின் சுகாதார மருத்துவ அதிகாரி டாக்டர். பேரி பேக்ஸ் தெரிவித்துள்ளார்.

ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்கள் பொது சுகாதாரப் பிரிவுக்கு ஒத்துழைப்பதாகக் குறிப்பிட்டு, உணவகம் மூடப்பட்டதாக டாக்டர் பேக்ஸ் கூறினார். இந்த உணவகத்தில் சாப்பிட்ட பிறகு எத்தனை வாடிக்கையாளர்கள் நோய்வாய்ப்பட்டனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இந்த நேரத்தில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை அல்லது கடுமையான நோய்க்கான சாத்தியமான காரணத்தை எங்களால் உறுதிப்படுத்த முடியாது என்று டாக்டர் பேக்ஸ் கூறினார்.

இந்நிலையில், கடந்த 27 மற்றும் 28ம் திகதிகளில் டிலைட் உணவகம் & BBQ இல் உணவு உண்டவர்கள் மற்றும் நோய் அறிகுறிகளை அனுபவிப்பவர்கள் மருத்துவ உதவியை நாட வேண்டும் என்று பொது சுகாதார பிரிவு அறிவுறுத்தியது.

இதில் உணவருந்துதல், எடுத்துச் செல்லுதல் மற்றும் டெலிவரி செய்த நபர்கள் உள்ளனர். தயவு செய்து உணவகத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட எஞ்சிய உணவு அல்லது எடுத்துச் சென்றதை வீசியெறியுமாறு டாக்டர் பேக்ஸ் கூறினார்.

தனிநபர்கள் 1-800-361-5653 என்ற இலக்கத்தின் ஊடாக திங்கள் முதல் வெள்ளி வரை காலை 8:30 – மாலை 4:30 மணி வரை ஹெல்த் இணைப்பைத் தொடர்பு கொண்டு நோய் அறிகுறிகள் குறித்து முறைப்பாடு தெரிவிக்க முடியும்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மார்க்கமில் ஒரு சம்பவம் நிகழ்ந்ததாக யோர்க் பிராந்திய காவல்துறை உறுதிப்படுத்தியது, இதன் போது பலர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.