Reading Time: < 1 minute

கனடாவில் பூங்கா ஒன்றில் இடம்பெற்ற கத்தி குத்துச் சம்பவத்தில் பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

பிரம்டனின் ஸ்பேரேவ் பூங்காவில் இந்த கத்தி குத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

டாவின்டர் காவூர் என்ற 43 வயதான பெண்ணே இவ்வாறு கத்தி குத்துச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நாவ் நிஷான் சிங் என்ற 44 வயதான நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த இருவரும் ஒருவரை ஒருவர் நன்றாகத் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும் எனவும் இவர்களுக்கு இடையிலான உறவு என்ன என்பது தெரியவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த கத்தி குத்துச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை அரம்பித்துள்ளனர்.