Reading Time: < 1 minute

கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றால் நேற்றுமட்டும் 94 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்புக்கள் எண்ணிக்கை 7,073 ஆக உயர்ந்துள்ளது.

கியூபெக்கிலேயே அதிகளவிலான மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் அங்குமட்டும் 4439 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாகவும் ஒன்ராறியோவில் 2247 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அந்நாட்டு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை 772 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 90 ஆயிரத்து 190 ஆக உயர்ந்துள்ளது.

அந்தவகையில் கியூபெக்கில் 50 ஆயிரத்து 651 பேரும் ஒன்ராறியோவில் 27 ஆயிரத்து 533 பேரும் அல்பேர்ட்டாவில் 6,992 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை இவ்வாறு தொற்று உறுதியானவர்களில் 48 ஆயிரத்து 103 பேர் குணமடைந்துள்ளதாகவும் 35 ஆயிரத்து 14பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.