Reading Time: < 1 minute

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கான தடுப்பூசி உருவாக்கப்படும் வரை சோதனை மற்றும் ஒப்பந்தத் தடமறிதல் ஆகியவை அவசியம் என பொது சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.

அத்துடன், பொருளாதாரத்தை எச்சரிக்கையுடன் மீண்டும் திறப்பதற்கும் இது முக்கிய பங்கு வகிக்கும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனடிப்படையில், மத்திய அரசு தனது ஆயிரக்கணக்கான ஊழியர்களை சோதனை மற்றும் ஒப்பந்தத் தடமறிதல் ஆகிய பணிக்கு பணிக்கு அமர்த்த முன்வந்துள்ளது.

இந்த கட்டத்தில், ஹெல்த் கனடா, கனடாவின் பொது சுகாதார நிறுவனம் மற்றும் தேசிய பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த 240இற்க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஒன்ராறியோவை தொடர்புத் தடமறிய உதவுகிறார்கள்.

மேலும் ஒட்டாவா பலவற்றை செய்ய முன்வந்துள்ளது. புள்ளிவிபரங்களின்படி கனடாவில் மட்டும் 1,700 திறமையான நேர்காணல் வல்லுநர்கள் உள்ளனர். அவர்கள் ஒரு நாளைக்கு 20,000 தொடர்பு தடமறிதல் அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.