Reading Time: < 1 minute

கனடா வரும் இலங்கையர்களுக்கு எவ்வித தடையும் விதிக்கப்பட மாட்டாது என குடிவரவு, ஏதிலிகள் மற்றும் குடியுரிமை அலுவலக பிரதானி தெரிவித்துள்ளார்.

அண்மையில் கனடா ஒட்டவாவில் ஒரே குடும்பத்தின் ஐவர் உள்ளிட்ட 6 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சந்தேகநபராக இலங்கையை சேர்ந்த இளைஞரொருவரே அடையாளம் காணப்பட்டார்.

இந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு கனடா செல்லும் இலங்கையர்களுக்கு எவ்வித தடையும் விதிக்கப்பட மாட்டாது எனவும் அனைத்து விண்ணப்பங்களையும் வழமைபோல் பரிசீலிக்கப்படும் என குடிவரவு, ஏதிலிகள் மற்றும் குடியுரிமை அலுவலக பிரதானி தெரிவித்துள்ளார்.