Reading Time: < 1 minute
Tamil Business Directory
கனடாவில் டொரன்டோவில் 13 வயது சிறுவன் ஒருவன் பல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்பு பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த சிறுவன் தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சிறுவன் ஒரே நாளில் நான்கு கொள்ளை சம்பவங்களை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
முகமூடி அணிந்து கொண்டு துப்பாக்கி முனையில் மிரட்டி கொள்ளையிட்டு உள்ளதாக பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்த சிறுவன் மற்றும் ஒரு நபருடன் இணைந்து இந்த சிறுவன் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதாக விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.
இந்த சிறுவனுக்கு வாகன கொள்ளை சம்பவங்களுடனும் தொடர்பு இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.




