Reading Time: < 1 minute

கனடாவில் 2010ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில், 662 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அண்மைய ஆய்வுத் தகவலொன்று தெரிவிக்கின்றது.

இதன்மூலம், ஆண்டுக்கு சராசரியாக 70 பேர் பாதிக்கப்பட்டுள்ளதனை தெட்டத் தெளிவாக உணர்த்துகின்றது.

பாதிப்புக்குள்ளான மக்களுக்கான கனேடிய உள்நாட்டு படுகொலை தடுப்பு முயற்சி (சி.டி.எச்.பி.ஐ.வி.பி) நடத்திய தேசிய ஆய்வின்படி குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

வெஸ்டர்ன் யுனிவர்சிட்டி மற்றும் குயெல்ப் பல்கலைக்கழகம் தலைமையிலான ஆராய்ச்சியின் ஒரு பகுதி புள்ளிவிபரங்கள் கனடா தரவுகளுடன் ஒத்துப்போகும் கண்டுபிடிப்புகளுடன் வெளியிடப்பட்டது.

இந்த உள்நாட்டு படுகொலையில் 80 சதவீதம் வயதுவந்தோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 59 சதவீதமானோல் குழந்தைகள் பாதிக்கப்பட்டவர்களாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உள்நாட்டு படுகொலைக்கு ஆளானவர்களில் பாதிக்கும் மேலானவர்கள் பழங்குடி பெண்கள், கிராமப்புற, தொலைதூர அல்லது வடக்கு பகுதிகளில் வசிப்பவர்கள், புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளாக இருக்கும் பெண்கள், அத்துடன் குழந்தைகள், உள்நாட்டுக்கு ஆளாகக்கூடிய குழந்தைகள் போன்ற பாதிக்கப்படக்கூடிய குழுக்களைச் சேர்ந்தவர்கள் என்று ஆராய்ச்சி காட்டுகிறது.

ஆராய்ச்சி, பரந்த பொது விழிப்புணர்வு மற்றும் தொழில்முறை பயிற்சி மூலம் உள்நாட்டு படுகொலைகளால் இறப்பவர்களின் எண்ணிக்கையை குறைப்பதே பாதிப்புக்குள்ளான மக்களுக்கான கனேடிய உள்நாட்டு படுகொலை தடுப்பு முயற்சி குழுவின் குறிக்கோள் ஆகும்.