Reading Time: < 1 minute

யாழ்.அனலைதீவில் நிர்மானிக்கப்படவுள்ள சோலார் மற்றும் காற்றாலை மின் உற்பத்தித் திட்டங்களுக்கான பூமி பூஜை நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது.

இந்திய நிறுவனத்தின் மின் பொறியியலாளர் தினேஷ் பாண்டியன் முன்னிலையில் குறித்த நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.

இலங்கை இந்திய அரசுகள் ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாட்டுக்கு அமைய இந்திய தனியார் நிறுவனத்தின் நிதி உதவியுடன் இப் புதிய மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.