Reading Time: < 1 minute

மனித கடத்தலை எதிர்த்துப் போராடுவதற்கான புதிய மூலோபாயத்தின் ஒரு பகுதியாக ஒன்ராறியோ ஆண்டுக்கு, 20 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்கீடு செய்கிறது.

Tamil Business Directory

இதுகுறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பினை, ஒன்றாரியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “இது முற்றிலும் யாருக்கும் ஏற்படலாம், இவர்கள் எங்கள் குழந்தைகள், அவர்களைப் பாதுகாப்பது நமது பொறுப்பு.

புதிய மூலோபாயம் வலுவானதாக இருக்கும். தப்பிப்பிழைப்பவர்கள் ஆதரிக்கப்படுவதையும், குற்றவாளிகள் பொறுப்புக்கூறப்படுவதையும் உறுதி செய்வார்கள்” என கூறினார்.

மேலும், மனித கடத்தல் எதிர்ப்பு முயற்சிகளில் 20 மில்லியன் டொலர்கள் ஒவ்வொரு ஆண்டும் முதலீடு செய்ய திட்டம் உள்ளது என்றும் கூறினார்.

குறித்த பணத்தில் பாதிக்கும் மேலானது அவசரகால மற்றும் இடைக்கால வீட்டுவசதி மற்றும் அதிர்ச்சி-தகவல் ஆலோசனை உள்ளிட்ட பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பு மற்றும் சேவைகளுக்குச் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒன்ராறியோ மாகாண பொலிஸ் மனித கடத்தல் எதிர்ப்பு குழுவுக்கு தகவல் பகிர்வை ஒருங்கிணைக்கும் 2.2 மில்லியன் டொலர்கள் நிதி கிடைக்கும்.