Reading Time: < 1 minute
Tamil Business Directory
கனடாவில் பஸ்ஸில், நபர் ஒருவரினால் தீ மூட்டப்பட்டு ஏற்பட்ட காயங்களுக்காக சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழந்துள்ளார்.
கடந்த ஜூன் மாதம் 17ம் திகதி கிப்லிங் மற்றும் டுன்டாஸ் அவன்யூவிற்கு அருகமையில் (Toronto) ஓடிக் கொண்டிருந்த பஸ்ஸில் நபர் ஒருவர், பெண் மீது தீ மூட்டியிருந்தார்.
தீ விபத்தில் காயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
சிகிச்சை பலனின்றி குறித்த பெண் உயிரிழந்து விட்டதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.




