Reading Time: < 1 minute

அமெரிக்காவில் ஜனாதிபதி டிரம்ப் தலமையிலான புதிய நிர்வாகத்தால் நாடு கடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ள சட்டவிரோத வெளிநாட்டினரில் 3,065 இலங்கையர்களும் அடங்குவதாக குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத் துறை (ICE) அறிவித்துள்ளது.

Tamil Business Directory

உலகெங்கிலும் உள்ள பல நாடுகளைச் சேர்ந்த 14 இலட்சத்து 45,549 பேர் கொண்ட பட்டியலை டிரம்ப் இன் புதிய அமெரிக்க நிர்வாகம் இப்போது அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசித்து வரும் பட்டியலில் சேர்த்துள்ளது.

அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்படுவதற்கான இறுதிப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள வெளிநாட்டினரின் எண்ணிக்கையும் இதில் அடங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை அமெரிக்க அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை ஆதரிக்காத நாடுகளின் பட்டியலும் வழங்கப்பட்டுள்ள நிலையில் இலங்கை இதில் உள்வாங்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.