Reading Time: < 1 minute

ஸ்கார்பாரோவில் ஒரு நீண்ட கால பராமரிப்பு நிலையத்தில் வாழ்ந்த முதிய தம்பதியினர் கொடிய கொரோனா (Covid19) தொற்றில் பலியாகியுள்ளனர்.

யாழ் வல்வெட்டித்துறையை சேர்ந்த திரு ஜவர்ஹர்லால்நேரு குமாரசாமி அவர்கள் நேற்றும் (செவ்வாய்கிழமை) இவரது துணைவியார் ராஜேஸ்வரி இன்றும் (புதன்கிழமை) மரணமடைந்துள்ளனர். இருவரும் ஸ்கார்பாரோவில் நீண்ட கால பராமரிப்பு நிலையத்தில் (Long term care homes) பாராமரிக்கப்பட்டு வந்தவர்கள்.

இவர்கள் தங்கியிருந்த நீண்ட கால பராமரிப்பு இல்லம் மிக பாரிய அளவில் கொரொனா நோய் தொற்றும், மரணங்களும் சம்பவித்துக்கொண்டிருக்கும் பராமரிப்பு நிலையமாகும்.

திரு. ஜகவல்லால் நேரு அவர்கள் உலகத்தமிழர் இயக்கத்தில் மொழி பெயர்பாளராகப் பணியாற்றினார், என்பதுடன் உலகத்தமிழர் பத்திரிகையில் பல அரசியல் கட்டுரகளை எழுதியதுடன் கனடியச் செய்திகளின் தொகுப்பாளராகவும் பணியாற்றினார்.

1980 களின் இறுதியில், கனடா வந்த நேரு அவர்கள் கல்விகற்பதற்கு வயதெல்லை இல்லை என்பதற்கிணங்க தனது 67ம் வயதில் ரொறன்ரோ யோக் பல்கலைக் கழகத்தில் BA சிறப்பப் பட்டத்தை படித்து முடித்தார். அதன் பின்னர் அதே பல்கலைக் கழகத்தில் பிறன்ச் (French) மொழியையும் கற்றுத் தேறியவராவார்.