Reading Time: < 1 minute கனடாவில் வெளிநாட்டு மாணவர்கள் என்ற போர்வையில் சில மோசடி சம்பவங்கள் பதிவாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடாவிற்குள் வருகை தரும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த ஒரு தசாப்த காலத்தில் கனடாவிற்கு வரும் வெளிநாட்டுப் மாணவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக உயர்வடைந்துள்ளது. கனடாவின் குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். சர்வதேச மாணவர்களின் வருகையானது வெறும் வீட்டுப் பிரச்சினை மட்டுமல்ல என அவர் தெரிவித்துள்ளார். கனடாவின் குடியேற்றக்Read More →

Reading Time: < 1 minute கனடாவின் அரசியல் பிரபலமொருவர் தொகுப்பாளராக மாறியுள்ளார். ரொறன்ரோ மாகாண முன்னாள் முதல்வர் ஜோன் டோரி, வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளர் பணியில் ஈடுபட்டு வருகின்றார். நியூஸ்டாக் என்ற நிகழ்ச்சியை டோரி தொகுத்து அளித்து வருகின்றார். நிகழ்ச்சி தொகுப்பாளராக கடமையாற்றியுள்ள ஜோன் டோரி, கடந்த 2018ம் ஆண்டின் பின்னர் முழு நேர அரசியலில் ஈடுபட்டதனால் இவ்வாறான நிகழ்ச்சிகளில் தொகுத்து வழங்கவில்லை. டோரி ஊடகத் துறையில் நீண்ட அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. செய்தியாளர்Read More →

Reading Time: < 1 minute இரண்டு முழங்கால்களிலும் அறுவை சிகிச்சை, இரண்டு முறை இடுப்பெலும்பு அறுவை சிகிச்சை, புற்றுநோய், மாரடைப்பு என அவருக்கு உள்ள பிரச்சினைகளைப் பார்த்தால், அவர் 24 மணி நேரமும் படுக்கையில் படுத்துக்கொண்டுதான் இருக்கவேண்டும். ஆனால், அந்த 86 வயது கனேடியர், நான்கு வயது சிறுமி ஒருத்தியின் உயிரைக் காப்பாற்றியதால், இன்று அவரை மக்கள் ஹீரோ என புகழ்கிறார்கள். கனடாவின் எட்மண்டனில் வாழ்ந்துவரும் Fred Wasylyshyn (86), தனது mobility scooter உதவியுடன்Read More →

Reading Time: < 1 minute கனடிய மக்களின் ஆயுட்காலத்தில் சிறு மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடிய மக்களின் ஆயுட்காலம் 81.7 வயது ஷகளிலிருந்து 81.6 வயதாக குறைவடைந்துள்ளது. இதேவேளை கனடாவில் இறப்பு வீதமும் ஒரு வீதத்தினால் உயர்வடைந்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு புள்ளி விபர தகவல்கள் மூலம் இந்த விடயங்கள் தெரியவந்துள்ளன. குறிப்பாக புற்றுநோய், இருதய நோய், மித மிஞ்சிய அளவில் மருந்து பயன்படுத்துதல் மற்றும் கோவிட் 19 நோய் தொற்றுRead More →

Reading Time: < 1 minute டொரன்டோ உயர்நிலைப் பாடசாலை ஒன்றில் ஆறு மாணவர்கள் 100 வீத சராசரி புள்ளிகளை பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளனர். டொரன்டோ மாவட்ட கத்தோலிக்க பாடசாலை சபையின் நிர்வாகத்தில் இயங்கி வரும் Father John Redmond பாடசாலையில் இவ்வாறு சாதனை படைக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கூடத்தில் 8 மாணவர்கள் சிறந்த பெருவேறு பெற்றுக் கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. இவர்களில் ஆறு மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் 100 வீத புள்ளிகளை பெற்று சாதனை படைத்துள்ளனர். இந்தRead More →

Reading Time: < 1 minute கனடாவில் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய கடவுச்சீட்டு தொடர்பில் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது. இந்த கடவுச்சீட்டை பயன்படுத்தும் பிரஜைகள் கடவுச்சீட்டு தரம் தொடர்பில் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். நான்கு நாட்களிலேயே சுருளும் கடவுச்சீட்டுகனடிய கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டு நான்கு நாட்களிலேயே அந்த கடவுச்சீட்டு சுருள்வதாகவும், விரிந்திருப்பதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பழைய கடவுச்சீட்டில் இவ்வாறான எந்த பிரச்சனையும் இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. எனினும் இந்த புதிய கடவுச்சீட்டு மடங்குவதாகவும் சுருள்வதாகவும் பயனர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். புதியRead More →

Reading Time: < 1 minute கனடாவில் காட்டுத் தீ விபத்து காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சக மக்களுக்கு உதவி வரும் ஒரு டாக்ஸி சாரதி பற்றிய தகவல் தற்பொழுது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. எலோ நைஃப் பகுதியைச் சேர்ந்த அப்துல் காரின் ஷாலு என்ற டாக்ஸி சாரதியே இவ்வாறு சக மக்களுக்கு உதவி வருகின்றார். காட்டுத்தீ அனர்த்தம் காரணமாக வீடுகளை இழந்து நிற்கும் மக்களில் அப்துல் காரிமும் ஒருவர், எவ்வாறினும் டாக்ஸி சாரதியான காரியம் ஏனைய மக்களுக்குRead More →

Reading Time: < 1 minute கனடாவில் ஹோட்டல் பில்லை செலுத்துமாறு கோரிய உரிமையாளர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். ஒன்றாரியோவின் ஓவன் சவுன்ட் பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றின் உரிமையாளரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். 44 வயதான சாரிபுர் ரஹ்மான் என்ற நபரை, சில வாடிக்கையாளர்கள் தாக்கிக் கொன்றுள்ளனர். உட்கொண்ட உணவிற்கான பில்லை செலுத்துமாறு மூன்று பேரிடம் ரஹ்மான் கோரியுள்ளார். எனினும், இதன் போது ஏற்பட்ட வாக்குவாதம் இறுதியில் மரணத்தில் முடிந்துள்ளது. கடந்த 17ம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகRead More →

Reading Time: < 1 minute கனடாவின் கியூபெக் மாகாணத்தில், ஒரு தந்தையும் அவரது பிள்ளைகளான இரட்டைக் குழந்தைகளும் சடலங்களாகக் கண்டெடுக்கப்பட்ட விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கியூபெக் மாகாணத்திலுள்ள Lanaudière என்னுமிடத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றிற்கு அழைக்கப்பட்ட பொலிசார், அங்கு ஒரு ஆணும், இரண்டு குழந்தைகளும் உயிரற்ற நிலையில் கிடப்பதைக் கண்டுள்ளனர். அந்த நபரின் பெயர் Ianik Lamontagne (46) என்றும், அந்தப் பிள்ளைகளுடைய பெயர்கள் Antoine மற்றும் Tristan என்றும் தெரியவந்துள்ளது. 3 வயதானRead More →