Reading Time: < 1 minute கனடாவில் ஒவ்வொரு ஆறு நிமிடத்திற்கு ஒரு வாகனம் என்ற அடிப்படையில் களவாடப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடாவின் நிதியியல் மற்றும் குத்தகை ஒன்றியத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டில் றொரான்டோவில் மட்டும் 9606 வாகனங்கள் காளவாடப்பட்டுள்ளன. இது கடந்த 2015ம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது மூன்று மடங்கு அதிகரிப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது. கனடாவில் வாகனத் திருட்டுச் சம்பவங்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்களவு உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2021ம்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் பேருந்து சாரதி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் 16 வயது சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹலிபெக்ஸில் கடந்த 2ஆம் திகதி பேருந்தில் ஏறிய இரண்டு பதின்ம வயது சிறுவர்கள் பயணி ஒருவரை வம்பிழுத்தனர். மேலும், இரண்டு பேரில் ஒருவர் பேருந்து சாரதியை தாக்கியுள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் குறித்த சந்தேக நபரை பொலிஸார் கைது செய்தனர். அவர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவுRead More →

Reading Time: < 1 minute சீனாவைச் சேர்ந்த AIIB எனப்படும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீடு வங்கியோடு தொடர்புகளைத் துண்டிப்பதாக கனடா அரசு அறிவித்துள்ளது. அந்த வங்கி சீன கம்யூனிஸ்ட் கட்சியினால் கட்டுப்படுத்தப்படுவதாக வந்த புகார்களையடுத்து கனடா இந்த அறிவிப்பை வெளியிட்டது. ஜெர்மனி இங்கிலாந்து பிரான்ஸ் ஆகிய ஜி7 உறுப்பு நாடுகளை அந்த வங்கி தனது வாடிக்கையாளர்களாக கொண்டுள்ளது. அதன்படி AIIB வங்கியின் சர்வதேச தகவல் தொடர்பு பிரிவு தலைவர் பொறுப்பிலிருந்து விலகிய கனடா குடிமகன் பாப்Read More →

Reading Time: < 1 minute கனடாவிலிருந்து நாடுகடத்தப்பட இருந்த முன்னாள் மாணவர்களுக்கு தற்காலிக குடியிருப்பு அனுமதி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள அதே நேரத்தில், ஏற்கனவே சில மாணவர்கள் நாடுகடத்தப்பட்டுவிட்டதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது. சர்வதேச மாணவர்கள் கனடாவிலிருந்து நாடுகடத்தப்படும் நிலை கனடாவில் கல்வி கற்பதற்காக விசாவுக்கு விண்ணப்பித்த இந்திய மாணவர்கள் சுமார் 700 பேருடைய அனுமதி ஆஃபர் கடிதங்கள் போலியானவை என தெரியவந்ததையடுத்து, அவர்கள் கனடாவிலிருந்து நாடுகடத்தப்படும் அபாயத்திற்குள்ளானார்கள். இந்திய தரப்பிலிருந்தும் கனடா தரப்பிலிருந்தும்Read More →

Reading Time: < 1 minute கனடாவின் மிக அதிக செலவுடைய நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வாழ்க்கை செலவு குறித்த 2023 Mercer Cost of living கருத்து கணிப்பு மூலம் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கனடாவில் மிகவும் செலவு கூடிய நகரங்களாக டொரன்டோ மற்றும் வன்கூவர் ஆகிய நகரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. உலகின் அதிக செலவு கூடிய நகரங்களின் வரிசையில் சர்வதேச அளவில் டொரன்டோ 90 ஆம் இடத்தை வகிப்பதுடன் கடந்த ஆண்டை விடவும் ஒரு படிRead More →

Reading Time: < 1 minute கனடாவில் மக்கள் எந்த விடயங்களுக்காக அதிகளவில் கவலையடைகின்றார்கள் என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, கனடாவில் பணப்பிரச்சினையால் மக்கள் அதிகளவில் கவலை கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கருத்துக் கணிப்பு ஒன்றின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. பணப் பிரச்சினை மக்களின் வாழ்க்கைத் தரம் மற்றும் நித்திரையை பாதிப்பதாக கருத்துக் கணிப்பு மூலம் தெரியவந்துள்ளது. கருத்துக் கணிப்பில் பங்கேற்ற 40 வீதமான மக்கள் பணப் பிரச்சினையினால் தாங்கள் அழுத்தங்களுக்கு உள்ளாவதாக தெரிவித்துள்ளனர். சுகாதாரம்,Read More →

Reading Time: < 1 minute கனடாவின் மனிடோபா மாகாணத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் குறைந்தது 15 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து சம்பவம் நேற்று வியாழக்கிழமை (15-06-2023) இடம்பெற்றுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. கார்பெர்ரி நகருக்கு அருகில் ட்ரக் வண்டி ஒன்றும் மினி வேன் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வின்னிபெக்கிற்கு மேற்கே இரண்டு மணிநேரம் தொலைவில் உள்ள கார்பெரிக்கு அருகில் உள்ள நெடுஞ்சாலை 1 மற்றும் நெடுஞ்சாலை 5Read More →

Reading Time: < 1 minute பிரிட்டிஷ் கொலம்பியாவின் South Okanagan என்ற இடத்தில் வாழ்ந்துவரும் ஹர்தீப் சிங் சஹால், கமல்தீப் கௌர் தம்பதியர் இம்மாதம் 13ஆம் திகதி கனடாவிலிருந்து நாடுகடத்தப்பட இருந்தனர். பின்னர், நாடுகடத்தல் ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கப்பட்டிருந்தது. திடீரென கிடைத்த மகிழ்ச்சியான செய்தி இந்நிலையில், செவ்வாயன்று மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி ஒன்று ஹர்தீப் குடும்பத்துக்கு கிடைத்துள்ளது. ஆம், நாடுகடத்தல் காலவரையறையின்றி தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அரசு அவர்களுக்குத் தெரிவித்துள்ளது. மேலும், அவர்கள் ரத்து செய்யப்பட்ட பணி அனுமதிகளைRead More →

Reading Time: < 1 minute எதிர்வரும் வெள்ளிக்கிழமை கனடாவின்மக்கள் தொகையில் மாற்றம் ஏற்படப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் மொத்த மக்கள் தொகை நாற்பது மில்லியனாக பதிவாகும் என புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. எதிர்வரும் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு முன்னதாக இவ்வாறு மக்கள் தொகை நாற்பது மில்லியனாக பதிவாகும் என தெரிவித்துள்ளது. கனடிய தினம் அனுஸ்டிக்கப்பட உள்ள நிலையில் மக்கள் தொகையில் இவ்வாறான ஓர் மைல்கல் எட்டப்பட்டுள்ளதாக புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பிரதானி அனில் ஆரோரா தெரிவித்துள்ளார்.Read More →

Reading Time: < 1 minute கனடாவில் கோடாரியுடன் ரயிலில் ஏறிய நபர் ஒருவரினால் பெரும் பரபரப்பு நிலை ஏற்பட்டது. கல்கரியின் மார்டின்டேல் எல்.ஆர்.டி ரயில் நிலையத்தில் ரயிலில் ஏறிய நபரினால் இந்த நிலைமை உருவாகியுள்ளது. கோடாரியைக் கொண்டு குறித்த நபர் பயணிகளை அச்சுறுத்தியுள்ளார். ஆடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கோடாரியைக் கொண்டு பயணிகளை அச்சுறுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவத்தில் பயணிகள் எவரும் காயமடையவில்லை என கல்கரி பொலிஸார் தெரிவிக்கின்றனர். கோடாரியைக் கொண்டு பயணிகளை தாக்க முயற்சித்த நபரைRead More →

Reading Time: < 1 minute ஒன்றாரியோவில் இரண்டு இளைஞர்கள் மீது கத்தி குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தென் ஒன்றாரியோவின் சட்பரி பகுதியின் கார்சன் பகுதியில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த கத்தி குத்துச் சம்பவத்தில் 17 வயதான சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த இரண்டு இளைஞர்களையும் பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும், சிகிச்சை பலனின்றி 17 வயதான சிறுவன் உயிரிழந்துள்ளான். இரண்டு குழுக்களுக்கு இடையிலான மோதல் காரணமாக இவ்வாறு கத்தி குத்துRead More →

Reading Time: < 1 minute கனடாவிலிருந்து நாடுகடத்தப்பட இருந்த முன்னாள் மாணவர்களுக்கு தற்காலிக குடியிருப்பு அனுமதி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. கனடாவில் கல்வி கற்பதற்காக விசாவுக்கு விண்ணப்பித்த இந்திய மாணவர்கள் பலருடைய அனுமதி ஆஃபர் கடிதங்கள் போலியானவை என தெரியவந்ததையடுத்து, அவர்கள் கனடாவிலிருந்து நாடுகடத்தப்படும் அபாயத்திற்குள்ளானார்கள். இந்திய தரப்பிலிருந்தும் கனடா தரப்பிலிருந்தும் விடுக்கப்பட்ட கோரிக்கைகளைத் தொடர்ந்து, கனடா அரசு அந்த விடயத்தை சட்டப்பூர்வமாக அணுகிவருகிறது. இந்நிலையில், அந்த முன்னாள் மாணவர்கள் ஒவ்வொருவருடைய வழக்கும் தனிப்பட்ட முறையில் பரிசீலிக்கப்பட்டுRead More →

Reading Time: < 1 minute கனடாவில் விலங்குகளிடம் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நச்சு இரசாயனங்களை பயன்படுத்தி செய்யும் பரிசோதனைகளுக்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது. எலி, நாய், மற்றும் முயல் போன்ற விலங்குகளிடம் மேற்கொள்ளப்படும் இரசாயன பரிசோதனைகளுக்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது. இரசாயனப் பொருட்களினால் மனிதருக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு குறித்து கண்டறிந்து கொள்வதற்காக இவ்வாறு விலங்குகளிடம் பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றது. இந்த பரிசோதனைகளின் மூலம் விலங்குகள் மீது மிதமிஞ்சிய அளவில் நச்சு இரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதாக மிருக நலRead More →

Reading Time: < 1 minute கனடாவிற்கு கடுந்தொனியில் ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. அண்மையில் ரஷ்ய விமானம் ஒன்றை கனடிய அரசாங்கம் பறிமுதல் செய்திருந்தது கனடாவின் பியசர்சன் விமான நிலையத்தில் நீண்ட காலம் தரித்து நின்ற விமானம் ஒன்று இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டது. உக்ரைன் மீதான சட்டவிரோத படையெடுப்பினை கண்டிக்கும் நோக்கில் இவ்வாறு விமானம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அண்மையில் கனடிய பிரதமர் ட்ரூடோ, உக்கிரேனுக்கு விஜயம் செய்திருந்த போது இந்த விடயம் பற்றி குறிப்பிட்டிருந்தார். விமானம் பறிமுதல்Read More →