Reading Time: < 1 minute கனாடவில் வெளிநாட்டு தலையீடுகள் தொடர்பிலான விசாரணைகள் மீள ஆரம்பிக்கப்பட உள்ளது. எதிர்வரும் ஆண்டில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 மற்றும் 2021ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் நடைபெற்ற பொதுத் தேர்தல்களின் போது சில நாடுகள் தலையீடு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சீனா, ரஸ்யா அல்லது வேறும் நாடுகள் தலையீடு செய்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வெளிநாட்டு தலையீடுகளை கண்டறிந்து அவற்றுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுப்பது குறித்து கவனம் செலுத்தப்படRead More →

Reading Time: < 1 minute கனடாவில் பொருளாதாரம் பின்னடைவை எதிர்நோக்கி வருவதாக அண்மைய தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது. கனேடிய புள்ளி விபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிய வந்துள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரித்து செல்லாத போக்கு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் பொருளாதாரத்தில் பாரிய மாற்றங்கள் எதுவும் பதிவாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தி, நாட்டின் பொருட்கள் சேவைகள் விற்பனை போன்றன மந்த நிலையில்Read More →

Reading Time: < 1 minute கனடா, 2024 -2026ஆம் ஆண்டுகளுக்கான புலம்பெயர்தல் திட்டத்தை வெளியிட்டுள்ளது. நேற்று மதியம் இந்த திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. கனடா, 2024ஆம் ஆண்டில் 485,000 புதிய புலம்பெயர்ந்தோரை வரவேற்க உள்ளது. 2025 மற்றும் 2026ஆம் ஆண்டுகளில், 500,000 புதிய புலம்பெயர்ந்தோர் கனடாவுக்கு வரவேற்கப்பட இருக்கிறார்கள். 2024இல், பொருளாதார பிரிவின் கீழ் 281,135 புலம்பெயர்ந்தோர் வரவேற்கப்பட இருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை 2026இல் 301,250ஆக அதிகரிக்கப்பட உள்ளது. குடும்ப பிரிவில், 2024இல் 114,000 புலம்பெயர்ந்தோர் வரவேற்கப்படRead More →

Reading Time: < 1 minute கனடாவின் டொரன்டோ நகரில் அமைந்துள்ள மூன்று பாடசாலைகளில் குண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று பாடசாலைகளையும் போலீசார் சோதனையிட்டுள்ளனர். இதன்போது குறித்த பாடசாலைகளில் எவ்வித குண்டு அச்சுறுத்தல்களும் கிடையாது என போலீசார் தெரிவித்துள்ளனர். குண்டு தொடர்பிலான தகவல் கிடைக்கப்பெற்றதும் குறித்த பாடசாலைகளில் இருந்து மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். பாடசாலை தொடர்பிலான அச்சுறுத்தல்கள் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்வாறான அச்சுறுத்தல்களை கருத்தில் கொள்ளாதிருக்க முடியாது என அவர்கள்Read More →

Reading Time: < 1 minute ஆண்டுதோறும் பருவ மாற்றத்திற்கு ஏற்ற வகையில் கனடாவில் நேர மாற்றம் நடைமுறைப்படுத்தப்படுவது வழமையானதாகும். எதிர்வரும் 5ம் திகதி இந்த நேர மாற்றம் செய்யப்பட உள்ளது. 5ம் திகதி அதிகாலை இரண்டு மணிக்கு ஒரு மணித்தியாலம் பின்நோக்கி நகர்த்தப்படவுள்ளது. கடந்த மார்ச் மாதம் ஒரு மணித்தியாலம் முன்நோக்கி நகர்த்தப்பட்டது. இந்த நேர மாற்றம் எமது அன்றாட நடவடிக்கைகளில் சிறு சிறு பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக நித்திரை பிரச்சினைகளைRead More →

Reading Time: < 1 minute எகிப்தில் மரண தண்டனையை எதிர்நோக்கி வரும் ஏதிலிக் கோரிக்கையாளரை கனடா நாடு கடத்த உள்ளது. டொக்டர் இஸாட் கவுடா என்ற மகப்பேற்று மருத்துவ நிபுணரே இவ்வாறு நாடு கடத்தப்பட உள்ளார். அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் டொக்டர் கவுடாவிற்கு எகிப்து அரசாங்கம் மரண தண்டனை விதித்துள்ளது. இவ்வாறான ஓர் ஆபத்து நிலவும் நிலையில் தம்மை நாடு கடத்துவது எந்த வகையில் நியாயமானது என டொக்டர் கவுடா கேள்வி எழுப்பியுள்ளார்.Read More →

Reading Time: < 1 minute கனடாவில் அதிக பிரபல்யமான இரண்டு செயலிகளுக்கு அசராங்கம் தடை விதித்துள்ளது. மத்திய அரசாங்க சாதனங்களில் இரண்டு செயலிகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. வீசெட் மற்றும் கெஸ்பர்ஸ்கை ஆசிய செயலிகளே இவ்வாறு கனடிய அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்ள்ளது. சீன நிறுவனமொன்றின் வீசெட் செயலியைக் கொண்டு குறுஞ்செய்திகளை அனுப்ப முடியும். ரஸ்ய நிறுவனமொன்றின் செயலியான கெஸ்பர்ஸ்கை செயலியானது சைபர் பாதுகாப்பினை உறுதி செய்கின்றது. இந்த இரண்டு செயலிகளும் அரசாங்க சாதனங்களிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும்Read More →

Reading Time: < 1 minute ஒன்றாரியோ மாகாணத்தில் எரிபொருளுக்கான வரி குறைப்பு காலம் நீடிக்கப்பட்டுள்ளது. முதல்வர் டக் போர்ட் தலைமையிலான அரசாங்கம் தொடர்ந்தும் வரிச் சலுகை வழங்குவதாக அறிவித்துள்ளது. எதிர்வரும் 2024ம் ஆண்டு ஜூன் மாதம் 30ம் திகதி வரையில் வரிச் சலுகை நீடிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் 1ம் திகதி தொடக்கம் இந்த எரிபொருள் வரிச் சலுகை வழங்கப்பட்டு வருகின்றது. மக்கள் பெரும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகவும்Read More →

Reading Time: < 1 minute கனடாவின் பெடரல் அரசு, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு எத்தனை புலம்பெயர்வோரை வரவேற்க இருக்கிறது என்பதைக் குறித்த தனது புலம்பெயர்தல் இலக்கை அறிவிக்கத் தயாராகிக்கொண்டிருக்கிறது. ஆனால், ஏற்கனவே கனடாவுக்கு புலம்பெயர்ந்து வந்தவர்களோ, வேறொரு நாட்டுக்கு புலம்பெயர்ந்துகொண்டிருக்கிறார்கள். கனடாவுக்கு புலம்பெயர்ந்தவர்களில் ஒரு கூட்டத்தினர் கனடாவை விட்டு வேறொரு நாட்டுக்கு புலம்பெயர்ந்துள்ளார்கள். The Institute for Canadian Citizenship and the Conference Board of Canada என்னும் அமைப்பு மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள்,Read More →

Reading Time: < 1 minute கனடாவில் அதிகளவான எலிகளைக் கொண்ட நகரமாக டொரன்டோ நகரம் பட்டியலிடப்பட்டுள்ளது. எலி உள்ளிட்ட விலங்குகள் மற்றும் பூச்சிகளை கட்டுப்படுத்தும் நிறுவனம் ஒன்று இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. கனடாவிலும், ஒன்றாயோவிலும் அதிக அளவு எலிகளைக் கொண்ட நகரமாக டொரன்டோ பட்டியலிடப்பட்டுள்ளது. அதிக எண்ணிக்கையிலான எலிகள் கொண்ட நகரங்களின் 25 நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் டொரன்டோ முதலிடத்தையும், வான்கூவார் இரண்டாம் இடத்தையும், பேர்ன்பே மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளன. நாட்டில் குளிருடனானRead More →

Reading Time: < 1 minute கனடாவில் போலீஸ் அவசர அழைப்பு பிரிவிற்கு அழைப்பினை மேற்கொண்டு தமது தொலைக்காட்சியில் அலைவரிசைகளை பார்க்க முடியவில்லை என ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார். போலீஸ் அவசர முறைப்பாட்டு சேவைக்கு பல்வேறு வினோதமான அழைப்புகள் கிடைக்க பெறுவதாக போலீசார் தெரிவிக்கின்றனர். பொருத்தமற்ற இவ்வாறான அவசர அழைப்புகளினால் அத்தியாவசியமான தேவையுடையவர்கள் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. கனடாவில் 911 என்ற போலீஸ் அவசர அழைப்பு இலக்கத்திற்கு நபர் ஒருவர் அழைப்பினை ஏற்படுத்தி தமது தொலைக்காட்சியில் அலை வரிசைகள்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் காசோலைகள் களவாடப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடாவில் ஒன்றாரியோ மாகாணத்தில் சிறு வர்த்தகம் ஒன்றில் ஈடுபட்டுள்ள நபர் ஒருவர் தபால் மூலம் அனுப்பி வைத்த காசோலை களவாடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 10,000 டாலர் பெறுமதியான காசோலை இவ்வாறு களவாடப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய வருமான முகவர் நிறுவனத்திற்கே அனுப்பி வைக்கப்பட்ட காசோலையே இவ்வாறு களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றார். களவாடப்பட்ட காசோலை வேறும் ஓர் கணக்கில் வைப்பிலிடப்பட்டு பணம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குற்றம்Read More →

Reading Time: < 1 minute லெபனாவில் வாழ்ந்து வரும் கனேடியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இறுதி நேரத்தில் நாட்டுக்கு அழைத்து வர முடியும் என உறுதியளிக்க முடியாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. நாட்டை விட்டு வெளியேறுவதனை இறுதி நேரம் வரையில் காலம் தாழ்த்த வேண்டாம் என கனடிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் போர் காரணமாக பிராந்திய வலயத்தில் பெரும் பதற்ற நிலை நிலவி வருகின்றது. இஸ்ரேலிய படையினர் லெபானின் ஹிஸ்புல்லாஹ் போராளிகள் மீதும்Read More →

Reading Time: < 1 minute கனேடிய அமைச்சர் ஒருவர், சமீபத்தில், கனடாவில் வீடுகள் பற்றாக்குறை பிரச்சினைக்கு புலம்பெயர்வோர்தான் காரணம் என்று கூறியிருந்தார். புலம்பெயர்தல் குறித்த, அரசியல்வாதிகள் சிலருடைய மன நிலைதான் இப்படி இருக்கிறது என்று பார்த்தால், பொதுமக்களுடைய மன நிலையும் புலம்பெயர்தலுக்கு எதிராக மாறியுள்ளது என்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று. The Environics Institute மற்றும் the Century Initiative என்னும் இரு அமைப்புகள் இணைந்து, புலம்பெயர்தல் தொடர்பில் கனேடிய பொதுமக்களின் கருத்து என்னவாக உள்ளதுRead More →