Reading Time: 2 minutes கடந்த அக்டோபரில், ஹெய்தி நாட்டில் ஆயுதமேந்திய கும்பல் ஒன்று 16 அமெரிக்க மிஷனெரிகள் மற்றும் கனேடிய மிஷனெரி ஒருவர் என, 17 பேரைக் கடத்திச் சென்றது. 400 Mawozo gang என்று அழைக்கப்படும் அந்த கடத்தல் கும்பல், சிலரை விமான நிலையத்திற்கு அனுப்புவதற்காக மிஷனெரிகள் சென்றுகொண்டிருந்த நிலையில், அவர்கள் சென்ற பேருந்தைக் கடத்தியது. அவர்களில் ஒருவரான Dale Wideman (24) என்ற கனேடியர், தற்போது தன கடத்தப்பட்டது குறித்த பயங்கரRead More →

Reading Time: < 1 minute கனடா முழுவதும் கொவிட் தொற்று நோய் தீவிரமடைந்து மீண்டும் மருத்துவமனைச் சேர்க்கைகள் வெகுவாக அதிகரித்துவரும் நிலையில் பைசரின் பாக்ஸ்லோவிட் (Paxlovid) வாய்வழித் தடுப்பு மருந்துக்கு விரைவாக அங்கீகாரம் வழங்குமாறு மருத்துவமனை நிர்வாகங்கள் அழைப்பு விடுத்துள்ளன. கொவிட் தொற்று நோயாளர் தொகை அதிகரித்து வருவதால் மருத்துவமனைகள் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருவதாக பல்கலைக்கழக மருத்துவமனைகளின் வலையமைப்பு (UHN) தலைவரும் ரொரன்டோ மருத்துவமனை தலைமை நிர்வாகியுமான டாக்டர் கெவின் ஸ்மித் நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.Read More →

Reading Time: < 1 minute ஒன்ராறியோவில் குறைந்தபட்ச ஊதியம் பெறும் சில தரப்பு தொழிலாளர்கள் இந்த வாரம் ஊதிய உயர்வை காண்பார்கள் என தெரியவந்துள்ளது. ஒன்ராறியோ நிர்வாகமானது குறைந்தபட்ச ஊதியம் பெறும் சில தரப்பு தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்தியுள்ளது. இதுவரை 14.35 டொலர் ஊதிய பெற்றுவந்தவர்கள் இனி மணிக்கு 15 டொலர்கள் ஊதியமாக பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 12.55 டொலர் ஊதியமாக பெற்றுவந்த மதுபான விடுதிகளில் பணியாற்றிவோர் இனி 15 டொலர் ஊதியமாக பெறுவார்கள்.Read More →

Reading Time: < 1 minute கொரோனா அச்சம் காரணமாக கனடாவின் ரொறன்ரோவில் இருந்து Bermudaவுக்கு நேரடியாக செல்லும் ஏர் கனடா விமான சேவைகள் நிறுத்தப்படப்படவுள்ளது. ஜனவரி 9ஆம் திகதி முதல் ரொறன்ரோவில் இருந்து Bermudaவுக்கு பயணிகள் விமானமானது செல்லாது என ஏர் கனடா தெரிவித்துள்ளது. தற்போதைய கொரோனா தொற்று சூழல் காரணமாக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஏர் கனடா செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். தொற்றுநோய்களின் வீரியம் மற்றும் அது தொடர்பாக அரசாங்கம் விதித்துள்ள கட்டுபாடுகள், தனிமைப்படுத்தல்கள் ஆகியவைகளைRead More →

Reading Time: < 1 minute கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 16 ஆயிரத்து 713 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி செய்யப்பட்டுள்ள நிலையில், 15 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கனடாவில் 21இலட்சத்து 59 ஆயிரத்து 023 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 30 ஆயிரத்து 295 பேர் மரணமடைந்திருப்பதாக தெரிவந்துள்ளது. கனடாவில் தற்போது வரை Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 2 இலட்சத்து 45ஆயிரத்து 853 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கொரோனாRead More →

Reading Time: < 1 minute கனடாவின் வெஸ்ட்ஜெட் ஏர்லைன்ஸ் (WestJet Airlines) ஜனவரியில் அதன் திட்டமிடப்பட்ட விமான சேவைகளில் 15 வீதத்தை இரத்துச் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. வேகமாகக் பரவி வரும் ஒமிக்ரோன் திரிபு காரணமாக தனது பணியாளர்களை முழுமையாகப் பணிக்கமர்த்த முடியாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகரித்த கொரோனா பரவல் மற்றும் கடும் குளிர் காரணமாக ஏற்கனவே பல விமான சேவைகளை அல்பர்ட்டாவின் கல்கரியை தலைமையிடமாகக் கொண்ட தனியாருக்குச் சொந்தமான வெஸ்ட்ஜெட் இரத்துச் செய்துள்ளRead More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா தொற்று நோய் தீவிரமடைந்துவரும் நிலையில் 6 மாகாணங்களில் நேற்று புதன்கிழமை முன்னொருபோதும் இல்லாத அளவு அதிகளவு தொற்று நோயாளர்கள் பதிவாகினர். ஒமிக்ரோன் திரிபு தீவிரத்தை அடுத்து பல மாகாணங்கள் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கி வரும் நிலையில் 6 மாகாணங்களில் தொற்று நோய் சாதனை மட்டத்துக்கு அதிகரித்துள்ளது. நாட்டின் அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணங்களான ஒன்ராறியோ, கியூபெக் மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியாவில் மிக அதிகளவு தொற்று நோயாளர்கள் நேற்றுRead More →

Reading Time: < 1 minute ஒமிக்ரோன் மாறுபாடு அச்சம் காரணமாக, கனடாவின் ஒன்றாரியோவின் நீண்ட கால பராமரிப்பு இல்லங்களில், பொது வருகைகள் நிறுத்தப்பட்டுள்ளது. சமூகத்தில் பரவும் ஒமிக்ரோன் வைஸசால் பாதிக்கப்படக்கூடிய குடியிருப்பாளர்களை வெளிப்படுத்தும் அபாயத்தைக் குறைக்க இந்த கொள்கை இன்று (வியாழக்கிழமை) முதல் நடைமுறைக்கு வருகின்றது. இதுகுறித்து நீண்டகால பராமரிப்பு அமைச்சர் ராட் பிலிப்ஸ் கூறுகையில், ‘இந்த நடவடிக்கைகள் பல குடும்பங்களை பாதிக்கும் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால், நாம் குறிப்பாக புதிய ஓமிக்ரோன் மாறுபாட்டிற்குRead More →

Reading Time: < 1 minute ஒன்ராறியோ மாகாணத்தில் பச்சிளம் குழந்தையை தெருவில் கைவிட்டு தப்ப முயன்ற பெண் மீது பொலிசார் வழக்குப் பதிந்துள்ளனர். ஒன்ராறியோவின் Kitchener நகரத்திலேயே குறித்த சம்பவம் திங்களன்று அரங்கேறியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் பொலிசார் வெளியிட்ட தகவலில், திங்களன்று பகல் சுமார் 11.10 மணியளவில் பொதுமக்களிடம் இருந்து தொடர்ந்து அழைப்பு வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். பெண் ஒருவர் டிக்சன் தெருவில் குடியிருப்பு ஒன்றின் முன்பாக, தெருவோரம் பச்சிளம் குழந்தை ஒன்றை கைவிட்டு, தப்பRead More →

Reading Time: < 1 minute கனடாவின் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட மாகாணமான கியூபெக்கில் கொரோனா தொற்றுக்குள்ளான சில அத்தியாவசிய சுகாதார பணியாளர்கள் தொற்று நோயுடன் தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளதாக அம் மாகாண சுகாதார அமைச்சர் கிறிஸ்டியன் டியூப் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். மாகாணத்தில் அத்தியாவசிய சுகாதாரத் தொழிலாளர்களுக்கு கடும் பற்றாக்குறை நிலவுவதால் தொற்றுக்குள்ளானவர்களும் தொடர்ந்து பணியாற்ற அனுமதிப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. சுகாதார சேவைகள் இடையூறின்றி தொடர்ந்து செயற்படுதை உறுதி செய்ய இதனைRead More →

Reading Time: < 1 minute கனடாவில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தினால் உலகில் உருளைக்கிழங்கு வறுவல் துண்டுகளுக்கும் (French Fries) கடுகுக்கும் பற்றாக்குறை நிலவுகிறதாக கூறப்படுகின்றது. கனடாவின் சில இடங்களில் வறட்சி நிலவுகிற அதேவேளை மறுபக்கம், சில இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதனால் விவசாய உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக குறிப்பாக, உருளைக்கிழங்கு, கடுகு ஏற்றுமதி கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் அதன் தாக்கம் ஜப்பானிலும் தென்படுகிறதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜப்பானின் McDonald’s கிளைகளில் உருளைக்கிழங்கு வறுவல் துண்டுகள்Read More →

Reading Time: < 1 minute உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் இடம்பெற்று கொண்டிருக்கின்ற நிலையில், ஒன்றாக இணைந்து ஒளிமயமான எதிர்காலம் நோக்கிப் பயணிப்போம் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) தெரிவித்துள்ளார். கிறிஸ்துமஸ் (Christmas) பண்டிகையை முன்னிட்டு அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் இதனைத் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று நிலைமைகளினால் மக்கள் நம்பிக்கையுடன் இருப்பதற்கான பல காரணிகள் உண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார். சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி கொரோனா மற்றும் ஓமிக்ரோன்Read More →

Reading Time: < 1 minute கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் குறைத்து மதிப்பீடு செய்யப்படுவதாக மாகாண சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதேவேளை, கியூபெக், ஒன்றாரியோ, மானிடோபா மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா ஆகிய மாகாணங்களில் அதிக எண்ணிக்கியிலான கொரோனா தொற்றாளர்கள் பதிவாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தற்போதைய நிலையில் பதிவாகி வரும் எண்ணிக்கையை விடவும் கூடுதல் எண்ணிக்கையில் கொரோனா நோய்த் தொற்று பரவி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், விடுமுறைக் காலத்தில் பாரிய ஒன்றுகூடல்களை மக்கள் முடிந்தளவு தவிர்த்துக்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் தமிழ் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடா – ஸ்காபரோவில் மகிஷன் குகதாசன் (19) என்ற இளைஞர் ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் ரொறோண்டோவில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் கடந்த 23 ஆம் திகதி முறைப்பாடு கிடைக்கப்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் ரொறோண்டோவைச் சேர்ந்த 19 வயதான அனோஜ் தர்சன் என்ற சந்தேகRead More →

Reading Time: < 1 minute கனடாவில் ஓமிக்ரோன் பரவ தொடங்கியுள்ள நிலையில் மற்றொரு பக்கம் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் தீவிரமாக பரவ தொடங்கியுள்ளது. இந்நிலையில் 24 மணிநேரத்தில் கனடாவில் ஒண்டாரியோ மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் 9 ஆயிரத்து 571 பேர் பாதிக்கப்பட்டதோடு 6 பேர் மரணமடைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடாவில் இதுவரை மொத்தமாக 19 இலட்சத்து 55 ஆயிரத்து 325 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 30 ஆயிரத்து 137 பேர் மரணமடைந்துள்ளனர். கனடாவில்Read More →

Reading Time: < 1 minute Omicron வகை கொரோனா வைரஸ் உட்பட கொரோனா பரவல் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, சில கனேடிய பல்கலைக்கழகங்கள், புத்தாண்டில் வகுப்புகள் துவங்கும்போது, வகுப்புகளை ஒன்லைனில் நடத்துவது என முடிவு செய்துள்ளன. குறிப்பாக, Simon Fraser பல்கலைக்கழகம், Northern B.C. பல்கலைக்கழகம் மற்றும் Victoria பல்கலைக்கழகம் ஆகியவை இந்த முடிவை எடுத்துள்ளன. பிரிட்டிஷ் கொலம்பியாவில் கொரோனா பரவல் அதிகரித்து, அதிலும் Omicron வகை கொரோனா வைரஸ் தொற்று அதிகரிக்கத்துவங்கியுள்ளதால், நேற்று இந்த அறிவிப்பைRead More →