Reading Time: < 1 minute கோவிட்19 சட்டங்களை மீறிச் செயற்பட்ட கனடிய மக்கள் கட்சியின் தலைவர் மெக்ஸிம் பர்னியருக்கு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது. கோவிட் சட்டங்களை மீறியதாக ஒப்புக்கொண்ட பர்னியருக்கு நீதிமன்றம் இரண்டாயிரம் டொலர் அபராதம் விதித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டில் மானிடோபாவில் பர்னியர் கோவிட் சட்ட மீறல்களில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பொதுக் கூட்டங்களை நடத்த வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் கூட்டங்களை நடத்தியதனால் பர்னியரை பொலிஸார் கைது செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுச்Read More →

Reading Time: < 1 minute மெக்சிகோ நகரம் ஒன்றில், கனேடியர் ஒருவர் கார் ஒன்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். கடந்த சில நாட்களில் குறிப்பிட்ட இடத்தில் சுற்றுலாப்பயணி ஒருவர் கொல்லப்படுவது குறித்த இரண்டாவது செய்தியாகும் இது. திங்கட்கிழமையன்று, மெக்சிகோவிலுள்ள Puerto Escondido என்னும் நகரில், கனேடியர் ஒருவர் கார் ஒன்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவரது உடலில் துப்பாக்கிக்குண்டு பாய்ந்த காயம் ஒன்று இருந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர். அவரது பெயர் Victor Masson (27) என்பது மட்டும் தெரியவந்துள்ளது.Read More →

Reading Time: < 1 minute கனடாவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், ஜமெய்க்காவில் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். 28 வயதான ஜெடா பவுலின் வைட் ஹெட் என்ற பெண்ணே இவ்வாறு அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். குறித்த பெண்ணுக்கும் கணவருக்கும் இடையில் முரண்பாட்டு நிலை ஏற்பட்டிருந்தது என தெரிவிக்கப்படுகின்றது. இதன் போது கணவர், தாக்கியதில் காயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் ஒருவரை கைது செய்துள்ளதாக ஜமெய்க்கா அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்தRead More →

Reading Time: < 1 minute கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு அவரது பணியிடத்தைச் சேர்ந்த ஏனைய இளையவர்கள் உதவிய விதம் பாராட்டப்பட்டு வருகின்றது. லிசா ஆம்ஸ்ட்ரோங் என்ற பெண்ணை சக பணியாளர்கள் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர். வான்கூவார் தீவுகளில் ரெஸ்டுரன்ட் ஒன்றில் பணியாற்றி வரும் குறித்த பெண்ணுக்கு சகல பணியாளர்கள் தங்களது சம்பளத்தை வழங்கியுள்ளனர். குடும்பத்தின் பிரதான வருமானமீட்டும் நபர் என்ற வகையில் லீசாவினால் மகப்பேற்றுக் காலத்தில் கூடுதல் விடுமுறை எடுக்க முடியாத சூழ்நிலைRead More →

Reading Time: < 1 minute கனடாவின் முன்னணி கேளிக்கை பூங்காக்களில் ஒன்றான வொன்டர்லாண்ட்டில் அமந்துள்ள ரோலர் கோஸ்டர் ஸ்தம்பித்த காரணத்தினால் பயணிகள் அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிட்டது. பயணித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென ரோலர் கோஸ்டர் ஸ்தம்பித்தது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இவ்வாறு ஸ்தம்பித்த ரோலர் கோஸ்டரின் தொழில்நுட்ப கோளாறை சரி செய்வதற்கு சுமார் 45 நிமிடங்கள் தேவைப்பட்டன. பாராமரிப்பு பணியாளர்கள் அனைத்து பயணிகளையும் பாதுகாப்பாக இறக்கியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனRead More →

Reading Time: < 1 minute கனடா- அல்பர்டா பிராந்தியத்தில் கட்டுக்கடங்காமல் எரியும் காட்டுத்தீயை விரைந்து கட்டுப்படுத்தும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார்.. அல்பர்டாவில் இந்த ஒரே மாதத்தில் நூற்றுக்கும் அதிகமான இடங்களில் பற்றி எரியும் காட்டுத்தீயால் இதுவரை 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். அதோடு தீயணைப்பு பணியில் அந்நாட்டு ராணுவத்தினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், எட்மான்டனில் நேரில் ஆய்வு செய்த பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தீயணைப்பு பணிக்காகRead More →

Reading Time: < 1 minute கனடாவில் ஏற்பட்ட வாகன விபத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த நபர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இச் சம்பவம் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை அனிஞ்சியன்குளம் மல்லாவியை பிறப்பிடமாக கொண்ட 39 வயதான நபரே உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது. வீதியில் திடீரென பாய்ந்து ஓடிய மான் ஒன்றின் மீது வாகனம் மோதி நிலை குலைந்தே விபத்து ஏற்பட்டதாகத் தெரியவருகின்றது. இந்த விபத்தில் மேலும் இருவர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த நபர் கனடாவிற்குRead More →

Reading Time: < 1 minute கனடாவில் இடம்பெற்ற கோர விபத்துச் சம்பவமொன்றில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். தென்மேற்கு ஒன்றாரியோவின் அதிவேக நெடுஞ்சாலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பிக்அப் ரக வாகனமொன்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் 51 வயதான ஆண் ஒருவரும், 52 வயதான பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். விபத்திற்கான காரணங்கள் எதுவும் இதுவரையில் கண்டறியப்படவில்லை. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.Read More →

Reading Time: < 1 minute கனடாவில் கியூபெக், ஒன்ராறியோ மற்றும் மனிடோபா பகுதிகளில் உள்ள 4 தொகுதிகளில் இடைத்தேர்தல் முன்னெடுக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவிக்கையில், மனிடோபாவில் Portage–Lisgar மற்றும் Winnipeg South Centre, கியூபெக்கில் Notre-Dame-de-Grâce–Westmount, ஒன்ராறியோவில் Oxford ஆகிய நான்கு நாடாளுமன்ற தொகுதிகளில் எதிர்வரும் ஜூன் 19ம் திகதி இடைத்தேர்தல் முன்னெடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். ஒரு தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் மரணமடைந்ததால் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 3 தொகுதிகளில் உறுப்பினர்கள்Read More →

Reading Time: < 1 minute ரொறன்ரோ வடக்கு எட்டோபிகோக் பகுதியில் சனிக்கிழமை இரவு துப்பாக்கிச் சூட்டுக்கு பலியான இளம்பெண்ணின் அடையாளம் தெரிந்ததாக ரொறன்ரோ பொலிசார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவமானது இரவு சுமார் 11.15 மணியளவில் நடந்துள்ளது. தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார், நிறுத்தப்பட்டிருந்த வாகனம் ஒன்றில் துப்பாக்கி குண்டுகள் துளைத்திருந்ததை உறுதி செய்துள்ளனர். மேலும், இளம்பெண் ஒருவர் துப்பாக்கி குண்டு காயங்களுடன் உயிருக்கு போராடியபடி இருந்துள்ளார். இதனையடுத்து முதலுதவியும் உயிர்காக்கும் நடவடிக்கைகளும் உடனடியாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.Read More →

Reading Time: < 1 minute கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இன்றைய தினம் (15) ஆசியாவிற்கான விஜயத்தை ஆரம்பிக்கின்றார். தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு பிரதமர் விஜயம் செய்ய உள்ளார். ஜப்பானில் நடைபெறவுள்ள ஜீ7 நாடுகள் தலைவர்கள் மாநாட்டிலும் பிரதமர் பங்கேற்க உள்ளார். உலகம் பாதுகாப்பு அச்சுறுத்தல்களையும் பொருளாதார நிச்சயமற்ற தன்மையையும் எதிர்நோக்கி வரும் நிலையில் இந்த விஜயம் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. நாளை முதல் எதிர்வரும் 18ம் திகதி வரையில் பிரதமர் ட்ரூடோ,Read More →

Reading Time: < 1 minute கனடாவின் ரொறன்ரோ நகர மேயர் பதவிக்காக மொத்தமாக 102 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். எதிர்வரும் ஜூன் மாதம் 26ம் திகதி ரொறன்ரோ மேயர் பதவிக்கான இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. மேயர் பதவி வகித்து வந்த ஜோன் டோரி பதவியை ராஜினாமா செய்ததனைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு இவ்வாறு தேர்தல் நடத்தப்பட உள்ளது. தற்போதைய முன்னாள் நகராட்சி உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள் என பல்வேறு தரப்பினரும் தேர்தல் களத்தில்Read More →