Reading Time: < 1 minute கனடாவில் வேலையற்றோர் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் கனடாவில் 104000 புதிய வேலை வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக கனடாவின் வேலை வாய்ப்பற்றோர் எண்ணிக்கை 5.0 வீதமாக குறைவடைந்துள்ளது. கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. நான்கு மாத காலப் பகுதியில் மூன்று தடவைகள் வேலையற்றோர் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. முழு நேர வேலை வாய்ப்புக்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொருளியலாளர்கள் எதிர்வுகூறியதனை விடவும் வேலையற்றோர்Read More →

Reading Time: < 1 minute கனடா செல்வதற்காக முகவர்களால் இந்தியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் முகவர்களாலேயே காட்டிக்கொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்ட இலங்கை அகதிகள் 38 பேர் இன்று முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு 2021 – 06 – 10 ஆம் திகதி கர்நாடகாவின் மங்களுரில் கைது செய்யப்பட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர்களை விடுதலை செய்த நீதிமன்றம் இலங்கையர்களை நாட்டிற்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு உத்தரவிட்டிருந்தது. 15 நாள்கள் அவகாசம் அதற்கானRead More →

Reading Time: < 1 minute கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள சிறை ஒன்றிற்குள் ஒரு புறா பறந்துவந்தது. அந்த புறாவின் கழுத்தில் இருந்த பொருள் என்னவென்று அறிந்த அதிகாரிகள் திகைத்துப்போனார்கள். புறாவின் கால்களில் கட்டிய ஓலை அல்லது காகிதத்தில் செய்திகள் அனுப்பப்படும் வழக்கம் உலக நாடுகள் பலவற்றில் நீண்ட காலமாகவே இருந்துவருகிறது. அந்த காலகட்டம் திரும்பிவிட்டதோ என சந்தேகிக்கும் சம்பவம் ஒன்று சமீபத்தில் பிரிட்டிஷ் கொலம்பியா சிறை ஒன்றில் நிகழ்ந்தது. சென்ற வாரம், பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ளRead More →

Reading Time: < 1 minute கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் இட்டாபிகோக் பகுதியில் சாரதியொருவர் பாதசாரி மீது வாகனத்தை மோதி, தப்பிச் சென்றுள்ளார். இந்த விபத்தில் 59 வயதான நபர் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். இட்டாபிகோக்கின் செகன்ட் ஸ்ட்ரீட் மற்றும் லேக் சோர் பகுதிகளுக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடின நிறமுடைய போர்ட் பிக்கப் ரக வாகனத்தில் பயணம் செய்த சாரதியே இந்த விபத்தை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பாதையை கடக்க முயற்சித்தRead More →

Reading Time: < 1 minute மெக்ஸிக்கோவில் வாழ்ந்து வரும் கனேடியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மெக்ஸிக்கோவில் இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்களுக்கு மத்தியில் கனேடியர்கள் சிக்கிக் கொண்டுள்ளனர். சுற்றுலாப் பயணிகளை விமான நிலையத்திற்கு ஏற்றிச் செல்லவிருந்த பஸ்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. மெக்‌ஸிக்கோவின் பிரபல போதைப் பொருள் கடத்தல்காரர் ஒவிடியோ என்பவரை கைது செய்த காரணத்தினால் அந்தப் பகுதிகளில் வன்முறைகள் வெடித்துள்ளன. விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேவையற்ற நடமாட்டத்தை தவிர்க்குமாறு கனேடியர்களிடம் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. மெக்ஸிக்கோவின்Read More →

Reading Time: < 1 minute கனடாவுக்கு புலம்பெயரும் ஆசையில் நடந்தே கனடாவுக்குள் நுழையமுயன்ற சிறுபிள்ளைகள் உட்பட இந்தியர்கள் நான்கு பேர் பனியில் உறைந்து பரிதாபமாக பலியாகிக் கிடந்த சம்பவம் நினைவிருக்கலாம். 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19ஆம் திகதி, இந்தியாவின் குஜராத்தைச் சேர்ந்த, ஜகதீஷ் அவரது மனைவி வைஷாலி (33), தம்பதியரின் பிள்ளைகளான விஹாங்கி (12) மற்றும் தார்மிக் (3) ஆகியோர் கனடா அமெரிக்க எல்லையில் சடலங்களாக கண்டெடுக்கப்பட்ட விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபோலRead More →

Reading Time: < 1 minute கனடாவின் வின்னிபெக் ஹாக்கி பயிற்சியாளரின் எஸ்டேட் மீது ஒன்ராறியோ நபர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். தாம் இளைஞராக இருக்கும் போது தம்மை அந்த பயிற்சியளர் துஸ்பிரயோகம் செய்ததாக அந்த புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜான் டோ என தம்மை அடையாளப்படுத்தியுள்ள அந்த நபர் ராபர்ட் டாசன் என்பவரின் எஸ்டேட் மீதே புகார் மனு அளித்துள்ளார். இந்த நிலையில் ராபர்ட் டாசன் மீது இரு நபர்கள் ஏற்கனவே துஸ்பிரயோகம் தொடர்பான புகார்Read More →

Reading Time: < 1 minute ரொறன்ரோ தம்பதி ஒன்று தொழில் நிமித்தம் வெளிநாடு சென்ற நிலையில், அவர்களின் குடியிருப்பை விற்றுவிட்டு தலைமறைவாகியுள்ளது இன்னொரு தம்பதி. தொடர்புடைய வீட்டின் உண்மையான உரிமையாளர்கள் தொழில் நிமித்தம் 2022 ஜனவரி மாதம் வெளிநாடு சென்றுள்ளனர். இந்த இடைப்பட்ட காலத்தில் தம்பதி ஒன்று அந்த குடியிருப்பின் உண்மையான உரிமையாளர்கள் என கூறிக் கொண்டு வீட்டை விற்பனை செய்ய முறையான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். அத்துடன் வீட்டையும் விற்றுள்ளனர். புதிய உரிமையாளர்கள் அந்த வீட்டில்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் புதிய கோவிட் உப திரிபு குறித்து குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோவிட் திரிபுகளில் ஒன்றான ஒமிக்ரான் திரிபின் புதிய உப திரிபான XBB.1.5 என்னும் திரிபு கனடாவில் பதிவாகியுள்ளது. நேற்றைய தினம் வரையில் இந்த திரிபினால் பாதிக்கப்பட்ட 21 பேர் கனடாவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த திரிபு வேகமாக பரவுகின்றதா இல்லையா என்பது குறித்து தற்போதைக்கு எதிர்வுகூறல்களை வெளியிட முடியாது என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கனடாவிலும் சர்வதேசRead More →

Reading Time: < 1 minute கிரேட்டர் வான்கூவர் உயிரியல் பூங்காவில் குழந்தை ஒன்று கரடிகளால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அந்த குடும்பத்தினர் தற்போது வழக்கு தொடர்ந்துள்ளது. கடந்த 2019 ஆகஸ்டு மாதம் தொடர்புடைய சம்பவமானது கிரேட்டர் வான்கூவர் உயிரியல் பூங்காவில் நடந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பான புகார் கடந்த மாதம் பிரிட்டிஷ் கொலம்பிய உச்ச நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். சம்பவம் குறித்து ரிச்சர்ட் ஹான்சன் என்பவர் தெரிவிக்கையில், தாக்குதலின் போது அவரது மகளுக்கு பலவிதமான காயங்கள்Read More →

Reading Time: < 1 minute கனடாவின் நகரமொன்றில் கடமையாற்றி வரும் பொலிஸார் நிறவெறி அடிப்படையில் செயற்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கறுப்பின சாரதி ஒருவர் மீது ஒடுக்குமுறை பிரயோகிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கனடாவின் கியூபெக் மாகாணத்தின் தெரிபோன் என்னும் நகரில் கடமையாற்றி வரும் 18 பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. Pierre-Marcel Monsanto என்ற கனேடிய கறுப்பின பிரஜை ஒருவரின் சார்பில் கியூபெக் மனித உரிமைகள் மற்றும் இளைஞர் உரிமைகள் ஆணைக்குழு வழக்குத்Read More →

Reading Time: < 1 minute கனடாவின் றொரன்டோ பகுதியில் ஒர் நிறுவனத்தினால் விற்பனை செய்யப்படும் கோழி இறைச்சி விலை மிக அதிகம் என மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். லொப்லோவ்ஸ் என்னும் நிறுவனத்தினால் விற்பனை செய்யப்படும் கோழி இறைச்சி வகைகளின் விலை வெகு அதிகம் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சிக்கன் பிரெஸ்ட் பகுதிகளைக் கொண்ட ஒரு கிலோ கோழி இறைச்சி 27 டொலர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. கோழி இறைச்சி விலை அதிகரிப்பு குறித்து வாடிக்கையாளர் ஒருவர்Read More →

Reading Time: < 1 minute சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்காக போதைப் பொருள் கடத்திய தாதி ஒருவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தைச் சேர்ந்த தாதி ஒருவருக்கு எதிராக இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் குறித்த தாதி இவ்வாறு போதை மருந்து வகைகளை கைதிகளுக்காக கடத்திச் சென்றுள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த தாதி விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 50 வயதான குறித்தRead More →

Reading Time: < 1 minute கனடாவில் அமைந்துள்ள சீன, அமெரிக்கத் தூதரகங்கள், தேசிய பாதுகாப்பு மையம் மற்றும் நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்துவதாக மிரட்டல் விடுத்த இளைஞர் ஒருவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கனடாவின் ஒட்டாவாவைச் சேர்ந்த டெனியல் ஹுடோ என்ற 19 வயதான இளைஞர் ஒருவர் மீது பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர். கொலை செய்யப் போவதாகவும், தாக்குதல் நடத்தப் போவதாகவும் குறித்த இளைஞர் டுவிட்டர் பதிவுகள் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளார். பயங்கரவாத தாக்குதல், கொலைRead More →

Reading Time: < 1 minute கனடாவின் ஒன்ராறியோவில் இந்தியர் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட விடயம் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் பஞ்சாபைச் சேர்ந்த மோஹித் ஷர்மா (Mohit Sharma 28) என்னும் இளைஞர், புத்தாண்டு அன்று இரவு மாயமானார். பின்னர், ஆள் நடமாட்டம் இல்லாத ஓரிடத்தில், காரின் பின் இருக்கையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார் அவர். ஐந்து ஆண்டுகளுக்குமுன் மாணவர் விசாவில் கனடா சென்ற ஷர்மா, படித்து முடித்து, நிரந்தரக் குடியிருப்பு அனுமதியும் பெற்று, நிறுவனம் ஒன்றில் மேலாளராகRead More →

Reading Time: < 1 minute கனடாவில் இந்த ஆண்டில் வீட்டு விலைகளில் மாற்றம் ஏற்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2022ம் ஆண்டு பெப்ரவரி முதல் இந்த ஆண்டு டிசம்பர் வரையிலான காலப் பகுதியில் தேசிய அளவில் வீடுகளின் விலைகள் 23 வீத வீழ்ச்சியை பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த ஆண்டில் வீடுகளின் விலைகளில் பாரிய அளவில் அதிகரித்திருந்த நிலையில், வீடுகளின் விலைகளில் வீழ்ச்சி பதிவாகவுள்ளது. பெருந்தொற்று ஏற்படுவதற்கு முன்னதாக காணப்பட்ட காலப் பகுதியைப் போன்று மாகாணங்களில்Read More →