Reading Time: < 1 minute

பிரிட்டிஷ் கொலம்பியாவின் கம்லூப்ஸில் கனேடிய படைக்கு சொந்தமான ‘ஸ்னோபர்ட்ஸ் விமானம்’ விபத்துக்குள்ளானதில் கேப்டன் ஜெனிபர் கேசி உயிரிழந்துள்ளதாக தேசிய பாதுகாப்பு கனேடிய ஆயுதப்படை உறுதிப்படுத்தியுள்ளது.

Tamil Business Directory

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இந்த விபத்தில், விமானத்தின் விமானி கேப்டன் ரிச்சர்ட் மெக்டகல் காயமடைந்துள்ளார்.

அவர் தற்போது தனது காயங்களுக்கு சிகிச்சை பெற்று வருவதாக கனேடிய ஆயுதப்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

றோயல் கனடிய விமானப்படை அணியின் பொது விவகார அதிகாரியாக இருந்த ஜெனிபர் கேசி, நோவா ஸ்கொட்டியாவின் ஹாலிஃபாக்ஸைச் சேர்ந்தவர்.

கடந்த 2004ஆம் ஆண்டு கனடிய ஆயுதப்படைகளில் நேரடி நுழைவு அதிகாரியாக சேர்ந்தார். இதற்கு முன்பு, அவர் ஒன்ராறியோவின் ஹாலிஃபாக்ஸ், நோவா ஸ்கோடியா மற்றும் பெல்லிவில்லில் ஒளிபரப்பு வானொலி நிருபர், தொகுப்பாளர் மற்றும் தயாரிப்பாளராக இருந்தார்.

அவரது இழப்பு குறித்து கனேடிய ஆயுதப்படைகளின் பாதுகாப்புப் பணியாளர்களின் தலைவர் ஜெனரல் ஜொனாதன் வான்ஸ் கூறுகையில், ‘கேப்டன் ஜென் கேசியின் குடும்பத்திற்கு நாங்கள் எங்கள் இரங்கலை அனுப்புகிறோம், அவர் பலருக்கு ஒரு உத்வேகம் அளித்தவர் என்பதை அறிந்து கொள்ளுங்கள்’ என கூறியுள்ளார்.