Reading Time: < 1 minute

எதிர்வரும் நவம்பர் 2ஆம் திகதி காலை 2.00 மணிக்கு, கனடா முழுவதும் கடிகாரங்கள் ஒரு மணி நேரம் பின் நகர்த்தப்படவுள்ளன.

Tamil Business Directory

இதனுடன் “டேலைட் சேவிங் டைம் (Daylight Time)” எனப்படும் பண்டைய நடைமுறை இவ்வாண்டிற்கான கடைசி மாற்றத்தைக் காணும். ஆனால் இந்நடைமுறை குறித்து விமர்சனங்கள் வலுத்துள்ளன.

லிபரல் எம்.பி. மேரி-ஃபிரான்ஸ் லலோன்ட் (Marie-France Lalonde) சமீபத்தில் தனியார் உறுப்பினர் மசோதா ஒன்றை (Bill C-248) முன்வைத்துள்ளார்.

நேர மாற்றம்

இதில், வருடத்திற்கு இருமுறை நேர மாற்றும் பழக்கத்தை நிறுத்தி, நாடு முழுவதும் ஒரே நிலையான நேர முறைமை ஒன்றை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.

இந்த நடைமுறையால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் — மருத்துவம், விவசாயம், 24 மணி நேர வேலைகள் போன்ற துறைகளின் நிபுணர்கள் — அனைவரும் இதைப் பற்றி திறந்தவெளியில் பேச வேண்டும். பெற்றோர்கள், இளைஞர்கள் என அனைவரும் இதில் பங்கேற்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

ஒரு மாகாணம் ஒரு குறிப்பிட்ட நேர முறையைத் தேர்ந்தெடுத்தாலும், அது ஆராய்ச்சி ஆதாரங்களின் அடிப்படையில் இருக்க வேண்டும். எவ்வாறாயினும், வருடத்திற்கு இருமுறை நேரத்தை மாற்றும் பழக்கத்தை நிறுத்தவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

“ஒரு மணி நேரத்திற்குக் கூட சமூக நேரத்தை மாற்றுவது உடல் கடிகாரத்துக்கு ஒரு ‘ஜெட் லாக்’ போலே. இது தூக்கம், உணவு ஆசை, மனநிலை, இருதய ஆரோக்கியம் ஆகியவற்றில் குழப்பத்தை ஏற்படுத்தும்,” என யார்க் பல்கலைக்கழக உயிரியல் பேராசிரியர் டாக்டர் பட்ட்ரிசியா லேகின்-தாமஸ் தெரிவித்துள்ளார்.

மனித உடலில் உள்ள உள் உயிரியல் கடிகாரம் வெளிச்சத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது.

காலை வெளிச்சம் உடலின் நேர ஒழுங்கை இயல்பாக வைத்திருக்க உதவுகிறது. நேர மாற்றம் இதைச் சீர்குலைக்கும் என்று அவர் கூறியுள்ளார்.