Reading Time: < 1 minute

சீனாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தில் கைச்சாத்திடக் கூடாது என அமெரிக்காவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tamil Business Directory

கனேடிய பிரதமர் ஐஸ்டின் ரூடோ இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

சீன அரசாங்கத்தினால் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள கனேடிய பிரஜைகள் இருவரும் விடுதலை செய்யப்படும் வரை குறித்த வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டாம் என அவர் கோரியுள்ளார்.

ஹுவாவி நிறுவன தலைமை நிதி அதிகாரியை கனடா கடந்த வருட இறுதியில் கைது செய்தது.

இதனை அடுத்து கனேடிய பிரஜைகள் இருவரை தேசத்துரோக வழக்கில் சீனா கைது செய்து தடுத்து வைத்துள்ளது.