Reading Time: < 1 minute

கனடாவிலிருந்து பிரான்ஸிற்கு நூதனமான முறையில் கஞ்சா போதைப் பொருளை கடத்த முயன்ற இரண்டு விமான நிலையப் பணியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tamil Business Directory

பிரான்ஸ் நோக்கி சட்டவிரோதமாக 147,000 கனேடியன் டாலர் பெறுமதியிலான கஞ்சாவை கடத்த முயன்றதாக இந்த பணியாளர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

டொரோண்டோ விமான நிலையத்தில் பணியாற்றும் இரண்டு பயணப் பொதிகளை சுமக்கும் ஊழியர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விசாரணை 2025 மே மாதம் தொடங்கப்பட்டதாகவும், டொரோண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஒரு பிரான்ஸ் நாட்டவர் பாரிஸ் சென்ற பிறகு, அங்குள்ள காவல்துறையால் போதைப்பொருள் கடத்தல் சந்தேகத்தில் தடுத்து வைக்கப்பட்டார்.

ஆரம்ப விசாரணைக்குப் பிறகு, அவர் குற்றமற்றவர் என்று தெரிய வந்ததையடுத்து, இந்த விசாரணைகள் கனடிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதன் மூலம், அந்த பயணியின் பரிசோதனைக்கு வந்த சுமை கட்டுப்பாட்டுப் பதாகைகள் (baggage tags) மாற்றப்பட்டு, அவர் அறியாமல் 21 கிலோ கஞ்சா கொண்ட வேறு பை இணைக்கப்பட்டிருந்தது என்பது தெரியவந்தது.

51 வயதான Woodbridge நகரைச் சேர்ந்த டூகல் ஹேர்ன், மற்றும் 56 வயதான பிரம்டனைச் சேர்ந்த எட்வர்டு வின்டர் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.