Reading Time: < 1 minute
Tamil Business Directory
கனடாவின் இடோபிகொக் பகுதியில் அமைந்துள்ள பாடசாலையில் துப்பாக்கிச் சூட்டு சமப்வம் இடம்பெற்றுள்ளது.
எனினும் இந்த சம்பவத்தில் எவருக்கும் காயங்கள ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
உயர்நிலை பாடசாலையொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற சம்பவத்தில் அனைத்து வகுப்பறைகளையும் மூடி மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்ததாக பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
குறித்த சம்பவத்தில் மாணவர்கள் கூடைபந்தாட்டம் விளையாடிக் கொண்டிருந்தனர் எனவும் எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.




