Reading Time: < 1 minute

சுவிஸ் விமான சேவையான எடல்வீஸ் எர் (Edelweiss Air), குளிர்காலத்திற்காக இலங்கைக்கான திட்டமிடப்பட்ட பயண சேவைகளை மீண்டும் ஆரம்பித்தது.

Tamil Business Directory

அதன்படி, அதன் முதல் விமானம் 221 பயணிகளுடன் இன்று (01)காலை 9.25 மணிக்கு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA) வந்தடைந்தது.

விமான நிலைய மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (பிரைவேட்) லிமிடெட் (AASL) இன் கூற்றுப்படி, Edelweiss தனது A340-300 விமானங்களை ஒக்டோபர் 31 அன்று கொழும்புக்கு இயக்கத் தொடங்கியது.

இந்த சேவை 2025 மே 9 வரை தொடரும்.