Reading Time: < 1 minute
Tamil Business Directory
பிரிட்டிஷ் கொலம்பியாவின் காம்ப்பெல் ரிவர் பகுதியில் அமைந்து உள்ள என்.டி.பி கட்சி பிரசார அலுவலகம் மீது வெடி குண்டு தாக்குதல் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
கேம்ப்பெல் ரிவர் அலுவலகத்தில் பணிபுரியும் பிரசார மேலாளர் ஒருவருக்கு அச்சுறுத்தல் வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரசார செய்தித் தொடர்பாளர் ஹீதர் ஸ்டவுடன்பர்க் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
பொலிஸாருக்கு உடனடியாக வழங்கப்பட்டதாகவும், கட்சிப் பணியாளர்கள் பிரசார அலுவலகத்தை விட்டு தற்காலிகமாக வெளியேறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.




