Reading Time: < 1 minute

கனாடவில் வெளிநாட்டு தலையீடுகள் தொடர்பிலான விசாரணைகள் மீள ஆரம்பிக்கப்பட உள்ளது.

Tamil Business Directory

எதிர்வரும் ஆண்டில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019 மற்றும் 2021ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் நடைபெற்ற பொதுத் தேர்தல்களின் போது சில நாடுகள் தலையீடு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சீனா, ரஸ்யா அல்லது வேறும் நாடுகள் தலையீடு செய்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வெளிநாட்டு தலையீடுகளை கண்டறிந்து அவற்றுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுப்பது குறித்து கவனம் செலுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விசாரணைகளின் ஆரம்ப கட்ட விசாரணை அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதத்திலும் இறுதி அறிக்கை 2024ம் ஆண்டு இறுதியிலும் வெளியிடப்பட உள்ளது.

வெளிநாட்டு தலையீடு தொடர்பில் முன்னதாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் திருப்தியில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியிருந்தன.

இதனைத் தொடர்ந்து மீளவும் வெளிநாட்டு தலையீடுகள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட உள்ளன.