Reading Time: < 1 minute

சென்ற ஆண்டு ஜனவரி மாதம் 19ஆம் திகதி, குஜராத்திலுள்ள Dingucha என்ற கிராமத்தைச் சேர்ந்த, ஜகதீஷ் பட்டேல் (39), அவரது மனைவி வைஷாலி (37) மகள் விஹாங்கி (13) மற்றும் மகன் தார்மிக் (3) ஆகியோர் அடங்கிய குடும்பம், அமெரிக்காவுக்குள் நுழையும் முயற்சியின்போது, கனடா அமெரிக்க எல்லையில் பனியில் உறைந்து பரிதாபமாக பலியானது.

Tamil Business Directory

அவர்களை அமெரிக்காவுக்கு அனுப்புவதாக பணம் வாங்கிய சட்டவிரோத ஏஜண்டுகள், பட்டேல் குடும்பத்தினரை மனித்தோபா மாகாணத்திலுள்ள வின்னிபெக்கில் கொண்டு விட்டுவிட்டுச் சென்றுவிட, பட்டேல் குடும்பத்தினர் தாங்களாகவே நடந்தே எல்லையைக் கடக்க முயன்று, குளிரில் உறைந்து பரிதாபமாக பலியானார்கள்.

இந்த வழக்கு கனடா, அமெரிக்கா, இந்தியா, என மூன்று நாடுகளில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தங்களை புலம்பெயர்தல் ஏஜண்டுகள் என கூறிக்கொண்டு பட்டேல் குடும்பத்தினரை அமெரிக்கா அனுப்ப பணம் பெற்றுக்கொண்ட இரண்டுபேர் சமீபத்தில் இந்தியாவில் கைது செய்யப்பட்டார்கள்.

தற்போது அவர்களுடைய பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவர்கள் Bhavesh Patel மற்றும் Yogesh Patel ஆகியோர் என இந்திய பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

இந்நிலையில், தற்போது வழக்கில் மூன்றாவதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது பெயர் Dashrath Chaudhary.

கைது செய்யப்பட்டுள்ளவர்கள் மீது, மனிதக்கடத்தல், குற்றம் செய்ய சதி, மரணத்துக்குக் காரணமாக இருத்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.