Reading Time: < 1 minute

ஹெமில்டன் கிழக்கு பகுதியில் பெண்னொருவரை அச்சுறுத்தி பணம் மற்றும் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டுச் சென்ற மூவரை பொலிஸார், தீவிரமாக தேடி வருகின்றனர்.

நேற்று முன் தினம் (வெள்ளிக்கிழமை) டக்செடோ அவென்யூ வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்த பெண்னை, அச்சுறுத்தி கொள்ளையடித்து விட்டு, மூன்று பேர் கொண்ட குழுவொன்று தப்பிச் சென்றுள்ளது.

இதன்போது, அவர்களிடன் கைத் துப்பாக்கியொன்று இருந்தாக, குறித்த பெண் பொலிஸாரிடம் சாட்சியம் வழங்கியுள்ளார்.

இவர்கள், கருப்பு நிற ஸ்ட்டிக்கர்கள் ஒட்டிய ஜன்னல்களை கொண்ட கருப்பு நிற வாகனத்தில் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வாகனம் இறுதியாக டன்ஸ்முர் வீதியில் கிழக்கு நோக்கிச் சென்றதாகவும், பின்னர் தெற்கே கெனில்வொர்த் அவென்யூ வடக்கு நோக்கி திரும்பியதாகவும் கூறப்படுகின்றது.

இது திட்டமிடப்பட்ட கொள்ளை என குறிப்பிட்டுள்ள பொலிஸார், இதுகுறித்த மேலதிக விசாரணைகளை தற்போது தீவிரப்படுத்தியுள்ளனர்.