Reading Time: < 1 minute

வடக்கு சஸ்காடூனில் பொலிஸ் காவலில் இருந்து தப்பியோடியவரை, பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tamil Business Directory

19 வயதான ஈதன் மெராஸ்டி என்பவர், சாஸ்கடூனுக்கு வடக்கே சுமார் 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சாஸ்கின் ஸ்டான்லி மிஷனில் கடந்த சனிக்கிழமை, தப்பியொடியுள்ளார்.

நீதிமன்ற உத்தரவை மீறியதற்காக கைது செய்யப்பட்ட மெராஸ்டி, 5 அடி 8 அங்குலம் உயரம் மற்றும் சுமார் 170 பவுண்ட் எடையுள்ளவர் எனவும், கறுப்பு முடி மற்றும் பழுப்பு நிற கண்கள் கொண்டவர் என்றும் பொலிஸார் விபரித்துள்ளனர்.

மெராஸ்டி டெனாரே கடற்கரை, பகுதியைச் சேர்ந்தவர் இவர், அங்கு திரும்பி வரக்கூடும் எனவும், இவர் குறித்து தகவல் தெரிந்தால் தம்மை உடனடியாக தொடர்புக் கொள்ளுமாறும் பொலிஸார், பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.