Reading Time: < 1 minute
Tamil Business Directory
நேற்று காலை வேளையில் ஆண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் மருத்துவமனைக்குச் சென்று சேர்ந்துள்ளார்.
இவ்வாறான நிலையில் குறித்த அந்த நபர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சம்பவம் எங்கு இடம்பெற்றது என்பதனைக் கண்டறிவதற்கான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக ரொரன்ரோ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த அந்த நபருக்கு உயிராபத்தற்ற காயங்களே ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எனினும் அவர் எங்கு வைத்துச் சுடப்பட்டார் என்பதனை தம்மால் உறுதிப்படுத்த முடியவில்லை என்று விசாரணை அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் குறித்த விபரங்களும் வெளியிடப்படாத நிலையில் விசாரணைகள் தொடர்கின்றன.




