Reading Time: < 1 minute
Tamil Business Directory
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி குறித்து, ஒன்றாரியோவுக்கு விரைவில் மத்திய அரசாங்கத்திடமிருந்து பதில்கள் தேவை என டக் ஃபோர்ட் வலியுறுத்தினார்.
நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
‘தடுப்பூசிகள் எப்போது வரும், அவற்றில் எத்தனை பெறப் போகிறது, அவை எந்த வகையான தடுப்பூசிகள் என்று தனக்கு இன்னும் தெரியாது.
நாங்கள் நாளை தடுப்பூசிகளைப் பெறுகிறோம் என்பதை கடைசி நிமிடத்தில் நாம் கண்டுபிடிக்க முடியாது. நாங்கள் அந்த மூன்று பதில்களையும் சொல்ல மத்திய அரசாங்கத்திடம் கேட்கிறோம். நீங்கள் எனக்கு ஒரு விநியோகத் திகதியை கொடுக்க முடியாது? இல்லை, இது ஏற்றுக்கொள்ள முடியாதது’ என கூறினார்.




