Reading Time: < 1 minute

கிழக்கு டவுன்ஷிப்களில் ஏற்பட்ட தீவிபத்து தொடர்பாக, இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட இருவரும் 21 மற்றும் 24 வயதுடையவர்கள் என தெரிவித்துள்ள பொலிஸார், அவர்களிடம் தொடர்ந்தும் விசாரணை நடைபெற்றுவருவதாக கூறியுள்ளனர்.

புரோம்- மிசிஸ்கோய் பகுதியில் உள்ள களஞ்சிய சாலையை குறிவைத்தே இவர்கள், இதற்கு தீ வைத்ததாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை அதிகாலை 4 மணியளவில் இந்த தீவிபத்து சம்பவித்ததாகவும், இதுதொடர்பான விசாரணையை சரேட் டு கியூபெக்கின் முக்கிய குற்றப்பிரிவு முன்னெடுத்து வருகின்றது.