Reading Time: < 1 minute

மெட்ரோ வன்கூவரில் கடுமையான மழை பெய்யக்கூடுமென, கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் மெட்ரோ வன்கூவரில் 60 மில்லி மீட்டர் வரை மழை பெய்யும் என கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேலும், இன்று (செவ்வாய்க்கிழமை) மாலைக்குள் 40 முதல் 60 மில்லிமீட்டர் வரை மழை பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர ஆறுகள், சிற்றோடைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் முன்னறிவிப்பாளர்கள் எச்சரிக்கின்றனர்.

இதேவேளை இந்த புயலுடனான மழை மாகாணத்தின் வேறு சில பகுதிகளுக்கு கடுமையான பனியைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.