Reading Time: < 1 minute

கடந்த மாதம் கனடாவில் நாடுகடத்தப்பட்ட பாகிஸ்தான் பெண் உரிமை ஆர்வலர் கரீமா பலோச் மர்மமான முறையில் மரணம் அடைந்த நிலையில், அவரது சடலம் பாகிஸ்தானுக்கு கொண்டுவரப்பட்டு தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள தனது சொந்த கிராமத்தில் கடுமையான பாதுகாப்பின் கீழ் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

பலூசிஸ்தானில் உள்ள டம்ப் கிராமத்தில் அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள அவரின் குடும்பத்தினர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

அவரது ஆதரவாளர்கள், பாகிஸ்தான் ராணுவம் கிராமத்தை மூடி சீல் வைத்ததாகவும், அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதை தடுத்ததாகவும் கூறினர்.

இதற்கு முன்னதாக அவரது சடலம் நேற்று கனடாவிலிருந்து பாகிஸ்தானுக்கு கொண்டு வரப்பட்டது.

கரீமா பலோச்சின் உடல், அவர் காணாமல் போனதாகக் கூறப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு, டிசம்பர் 22 அன்று டொராண்டோவின் டவுன்டவுன் நீர்முனைக்கு அருகில் காணப்பட்டது.

டொராண்டோ போலீசார் அவரது மரணத்தை சந்தேகத்திற்குரியதாக கருதவில்லை. எனினும் அவர் கொல்லப்பட்டதாக அவரது ஆதரவாளர்களால் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

கரீமா பலூச்சின் இறந்த உடல் எவ்வாறு நடத்தப்பட்டது என்பதைப் பார்ப்பது திகிலூட்டுகிறது என பாஷ்டூனின் பழங்குடிப் பகுதிகளைச் சேர்ந்த முன்னாள் எம்பி மொஹ்சின் தாவர் கூறினார்.

இவர் பஷ்டூன் சிறுபான்மை உரிமைக்காக ஆனால் பலூச்சைப் போலவே பிரச்சாரம் செய்கிறார். மேலும் பாகிஸ்தான் உளவு அமைப்புகளையும் விமர்சித்துள்ளார்.

“இது பிளவு மற்றும் பிரிவினைவாதத்தை ஊற்றி வளர்ப்பதோடு எவ்வாறு அதை ஆழமாக்கும் என்பதைப் புரிந்துகொள்வது கடினம் அல்ல” என்று அவர் ட்வீட் செய்துள்ளதுடன் “பலூச் கிளர்ச்சியைக் கையாள்வதற்கும், பலூச்சின் காயங்களுக்கு உப்பு தெளிப்பதற்கும் இது ஒரு உத்தி?” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் பாகிஸ்தான் அரசாங்கத்திடமிருந்து உடனடியாக எந்தக் கருத்தும் வரவில்லை. எனினும் சமூக ஊடகங்களில் வெளிவந்த ஒரு வீடியோ, கரீமா பலோச்சிற்கு இறுதி மரியாதை செலுத்த விரும்புவதாகக் கூறும் அவரது ஆதரவாளர்களை, ராணுவ வீரர்கள் வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பியதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.