Reading Time: < 1 minute

கனடா பிக்கெரிங் (pickering ,Ontario)வாகனமொன்றில் மோதுண்டதனால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Tamil Business Directory

வாகனத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளான நிலையில் குறித்த நபர் வாகனத்தை விட்டு கீழே இறங்கி மகளை தூக்கிக் கொண்டு விதியின் மறுமுனைக்கு செல்ல முயற்சித்த போது மற்றும் ஒரு வாகனம் குறித்த இருவர் மீதும் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த மோதல் காரணமாக குறித்த இருவரும் கடுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பின்னர் சிகிச்சைகள் பலனின்றி இருவரும் உயிர் இழந்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தில் யாழ் நீர்வேலியைச் சேர்ந்த புஸ்பராசா பகீரதன் (கண்ணன்) மற்றும் அவரது 3 வயது மகள் றியானா பகீரதன் ஆகியோரே உயிரிழந்துள்ளார்கள்.

இந்த சம்பவம் தொடர்பில் போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.