Reading Time: < 1 minute

இந்த வார தொடக்கத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்தியாவிற்கு பயணிப்பவர்களுக்கான கூடுதல் பாதுகாப்பு திரையிடல் நடவடிக்கைகளை கனேடிய அரசாங்கம் நீக்கியுள்ளது.

Tamil Business Directory

இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரகப் பதட்டங்கள் அதிகரித்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தடைசெய்யப்பட்ட விமான நிலையப் பகுதிகளுக்குள் நுழைவதற்கு முன், பயணிகள் மற்றும் அவர்களது பொருட்கள் மேம்படுத்திய திரையிடல் பரிசோதனைகளை நடத்துவதற்கு கனடிய விமானப் போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம் (CATSA) பணித்தது.

கடந்த மாதம் புது டெல்லியில் இருந்து சிகாகோ சென்ற ஏர் இந்தியா விமானம் வெடிகுண்டு அபாயம் காரணமாக இக்கலூயிட்டுக்கு திருப்பி விடப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.