Reading Time: < 1 minute

நார்த் யார்க் பகுதியில் கடந்த 3 நாட்களாகக் காணாமல் போன 14 வயது சிறுமியைத் தேடும் பணியை டொராண்டோ பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Tamil Business Directory

இதற்காக அப்பகுதியில் சிறப்புத் தற்காலிகக் கட்டுப்பாட்டு மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. எஸ்தர் என்ற அந்தச் சிறுமி, கடந்த வெள்ளிக்கிழமை இரவு 11:30 மணியளவில், பாத்தர்ஸ்ட் தெரு மற்றும் ஷெப்பர்ட் அவென்யூ வெஸ்ட் அருகில் உள்ள ‘ஏர்ல் பேல்ஸ்’ பூங்காவில் கடைசியாகக் காணப்பட்டார்.

அவர் அங்கிருந்து வடகிழக்கு திசையை நோக்கிச் சென்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேக நபர் 5 அடி 2 அங்குலம் உடையவர் எனவும், நடுத்தர உடல்வாகுடையவர் எனவும், பழுப்பு நிற தலை முடி, கணுக்கால் பகுதியில் தளர்வான சாம்பல் நிற ஸ்வெட்பேண்ட்ஸ் மற்றும் பச்சை நிற நீளக்கைக் சட்டை அணிந்திருந்தார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் காலணி (Shoes) அணிந்திருந்தாரா இல்லையா என்பது குறித்து இன்னும் தெளிவான தகவல் இல்லை. ஞாயிற்றுக்கிழமை மதியம் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய போலிஸ் அதிகாரி ஸ்காட் பிராட்பரி (Scott Bradbury), சிறுமியின் பாதுகாப்பு குறித்து தாங்கள் மிகவும் கவலைப்படுவதாகத் தெரிவித்தார்.

அவர் காணாமல் போன போது என்ன செய்து கொண்டிருந்தார் அல்லது யாரையாவது சந்திக்கச் சென்றாரா என்பது குறித்த விவரங்கள் இன்னும் தெரியவில்லை. சிறுமியைக் கண்டுபிடிப்பதற்காக பொலிஸார் பல்வேறு அதிநவீன உத்திகளைக் கையாண்டு வருகின்றனர்.

காடுகளுக்குள் தேடுவதற்காக வெப்பத்தை உணரும் (Heat signatures) திறன் கொண்ட டிரோன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பூங்கா மற்றும் அதனைச் சுற்றியுள்ள நீர்நிலைகளில் தேடுவதற்கு குதிரைப்படை (Mounted Unit) மற்றும் கடற்படைப் பிரிவினர் (Marine Unit) களமிறக்கப்பட்டுள்ளனர்.

ஏராளமான போலீஸ் அதிகாரிகள் பூங்கா பகுதியை முழுமையாகச் சோதனையிட்டு வருகின்றனர்.

ஏர்ல் பேல்ஸ் பூங்கா பகுதியில் அதிக மரங்களும், பாதைகளும் இருந்தாலும், அது பொதுமக்கள் அதிகம் கூடும் இடமாகும். எனவே, அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் தங்களது சிசிடிவி (CCTV) கேமரா பதிவுகளை ஆய்வு செய்யுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.