Reading Time: < 1 minute

கனடாவில் மிகவும் தேடப்பட்டு வந்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ரொறன்ரோவின் கிழக்குப் பகுதியில் கடந்த கோடை காலத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

35 வயதான மைக்கல் பிபெ என்ற நபரே இவ்வாறு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கனடாவில் மிகவும் தேடப்பட்டு வரும் பட்டியலில் பிபெவின் பெயர் உள்ளடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிரின்ஸ் ஒப் எட்வர்ட் தீவுகளின் சார்லட்டவுன் பகுதியில் வைத்து குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மிகவும் தேடப்பட்டு வருவோர் பட்டியலில் இணைக்கப்பட்டு ஒரு வார கால இடைவெளியில் குறித்த சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பவல் ப்ளவர் என்ற நபரை, பிபெ என்பவர் படுகொலை செய்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சந்தேக நபரின் கைது தொடர்பில் ப்ளவரின் தாய் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.