Reading Time: < 1 minute

ஒன்ராறியோவில் ஆண் ஒருவர் தீக்காயங்களுக்கு உள்ளாகி பின்னர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்த விசாரணைகளை பொலிஸார் விரிவுப்படுத்தியுள்ளனர்.

Tamil Business Directory

லோவ்ரன்ஸ் அவனியூ மற்றும் டொன் வெலி பார்க்வே பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்து தீக் காயஙகளுக்கு உள்ளான நிலையில், ஆணொருவர் மருத்துவமனைக்கு கொண்டுச்செல்லப்பட்டார். எனினும், அவர் உயிரிழந்து விட்டார்.

பின்னர் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணையில், உயிரிழந்தவர் காலமான முன்னாள் ஒன்ராறியோ மாநில சுகாதார அமைச்சர் டேவிட் கப்லான் வீட்டிலேயே தீக்காயங்களுக்கு உள்ளானது தெரியவந்தது.

மேலும், வீட்டின் வாகன நிறுத்துமிடத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றதாகவும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்தது.

எனினும், உயிரிழப்பு ஏற்பட்டமைக்கான காரணம் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் இதுகுறித்த விசாரணைகளை பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.