Reading Time: < 1 minute
Tamil Business Directory
முகக்கவச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் அவர்களை எதிர்ப்பவர்களுக்கும் இடையில் அய்ல்மர் நகரில் இந்த வார இறுதியில் இரண்டு எதிரெதிர் போராட்டங்கள் நடக்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒன்ராறியோவில் 7,492 மக்கள் தொகை கொண்ட நகரமான அய்ல்மர் நகரம், முகக்கவசத்தை அணிவது தொடர்பான பிரச்சினையில் இது இரண்டாகப் பிளவுபட்டுள்ளது.
முகக்கவச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை எதிர்பார்த்து மேயர் மேரி பிரஞ்சு அவசரகால நிலையை அறிவித்ததை அடுத்து இந்த நிலைமை எழுந்தது.
முகக்கவசகளின் பயன்பாட்டை நிறுத்த ஒரு குழு போராடும் போது மற்ற குழு முகக்கவசகளை கட்டாயமாக வைத்திருக்க அணிவகுத்து நிற்கவுள்ளது.
அதிகரித்து வரும் பதற்றங்கள் இருந்தபோதிலும், முகக்கவச எதிர்ப்பு பேரணி அதன் அமைப்பாளரால் அமைதியான நிகழ்வு என்று வர்ணிக்கப்படுகிறது.




