Reading Time: < 1 minute
Tamil Business Directory
கரீபியன் பயணம் மேற்கொண்டதனால் எதிர்கொண்ட அழுத்தங்கள் மற்றும் விமர்சனங்களுக்கு மத்தியில், ஒன்ராறியோ நிதியமைச்சர் ரோட் பிலிப்ஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
கனடாவின் அதிக மக்கள்தொகை கொண்ட மாகாணத்தில் முடக்கநிலை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அனைத்து அத்தியாவசியமற்ற பயணங்களும் தடைசெய்யப்பட்டிருந்தது.
இதனிடையே முற்போக்கு கன்சர்வேடிவ் கட்சியின் உறுப்பினரான பிலிப்ஸ், டிசம்பர் 13ஆம் திகதி செயின்ட் பார்ட்ஸுக்கு தனிப்பட்ட பயணம் மேற்கொண்டு வியாழக்கிழமை காலை திரும்பினார்.
எனினும், தனிப்பட்ட பயணத்துக்கு ரோட் பிலிப்ஸ் அனைவரிடமும் மன்னிப்பு கேட்பதாக கூறியிருந்தார். இந்தநிலையில் அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.




