Reading Time: < 1 minute

ஒண்டாரியோ மாகாணத்தில் பாரியளவில் நிதி மோசடியுடன் தொடர்புடைய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Tamil Business Directory

ஒண்டாரியோவின் செவர்ன் டவுன்ஷிப் பகுதியில் வாழும் ஒரு நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

போலி ஆவணங்களை தயாரித்தமை தொடர்பாக சந்தேக நபர் மீது 11 குற்றச்சாட்டுகள் விதிக்கப்பட்டுள்ளன.

40 வயதான கெவின் டவுஸ் (Kevin Douse) என்ற நிதி ஆலோசகர் (Financial Advisor) கைது செய்யப்பட்டுள்ளார்.

டவுஸ் தனது சில வாடிக்கையாளர்களிடம் முதலீட்டு நிதிகளை நேரடியாக தனது பெயரில் செக் எழுதும்படி கோரி மோசடியில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், சில சந்தர்ப்பங்களில், மூலதனங்களின் தவறான பயன்பாட்டை மறைக்க, முதலீட்டு மற்றும் காப்பீட்டு ஆவணங்களை போலியாக உருவாக்கியதாகவும் போலி செய்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

சந்தேகிக்கப்படும் மொத்த தவறான நிதி நிர்வாகம்: $1.8 மில்லியனை (அமெரிக்க டாலர்) கடந்து இருக்கலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த மோசடி செயற்பாடுகள் பொது மக்களில் கூடுதல் பலர் மீதும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.