Reading Time: < 1 minute

ஐ.நா. பாதுகாப்புக் குழுவில் தற்காலிக ஆசனத்திற்கான முயற்சியை இழந்த போதிலும், ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிகாக்கும் பணிகளை தொடர்ந்து முன்னெடுக்க கனடா தீர்மானித்துள்ளது.

Tamil Business Directory

இதன்படி ஆபிரிக்காவில் ஐ.நா. நடவடிக்கைகளுக்கு ஆதரவாக சி.சி -130 ஹெர்குலஸ் தொடர்ந்து பயன்படுத்தப்படுவதை பாதுகாப்பு அமைச்சர் உறுதிப்படுத்தினார்.

பிராந்தியத்தில் ஐ.நா.வை ஆதரிப்பதற்காக முக்கியமான பொருட்கள் மற்றும் பணியாளர்களை கொண்டு செல்வதில் கனேடிய ஆயுதப்படைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அமைதி காக்கும் உச்சிமாநாட்டை நடத்தியபோது, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஐ.நா.வுக்கு அளித்த மூன்று கையெழுத்து வாக்குறுதிகளில் இதுவும் ஒன்றாகும்.