Reading Time: < 1 minute

கனடியா பிரதமர் மார்க் கார்னி, தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் மேற்கொண்ட இராணுவ ஆக்கிரமிப்பு முற்றிலும் சட்டவிரோதமானது என தனது கண்டனத்தைப் பதிவு செய்தார்.

Tamil Business Directory

கியூபெக்கில் (Quebec) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர், லெபனான் அரசு ஏற்கனவே ஹிஸ்புல்லா அமைப்பைத் தடை செய்திருப்பதை சுட்டிக்காட்டி, “அந்தப் பயங்கரவாத அமைப்பின் செயல்பாடுகள் மற்றும் இஸ்ரேலுக்கு அவர்கள் விடுக்கும் அச்சுறுத்தல்களுக்கு எதிராக லெபனான் அரசு தகுந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது அல்லது முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

ஆனால் இவை இந்த ஆக்கிரமிப்பிற்குப் போதுமான அல்லது நியாயமான காரணங்களாக முன்வைக்கப்பட முடியாது” என்று குறிப்பிட்டார்.

கார்னி, இஸ்ரேலின் இராணுவ நகர்வு லெபனான் நாட்டின் பிராந்திய இறையாண்மையை நேரடியாக மீறும் செயலாகும் என்றும், ஒரு சுதந்திர நாட்டின் எல்லைக்குள் அத்துமீறி நுழைவதை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் வலியுறுத்தினார்.

தனது நாட்டின் பார்வையில், சர்வதேச விதிகளுக்கு முரணான இந்தச் செயலை கனடியா வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.