Reading Time: < 1 minute

அமெரிக்கா- டெக்சாஸின் ஃபோர்ட் வொர்த்தில் உள்ள இன்டர்ஸ்டேட் 35 வெஸ்டில், சிறிய கார்கள், எஸ்யூவிகள் முதல் 18 லொரிகள் வரை மொத்தமாக 133 வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக வொர்த் பொலிஸ்துறை தெரிவித்துள்ளது.

Tamil Business Directory

நேற்று (வியாழக்கிழமை) காலை 6 மணியளவில் சி.டி. மற்றும் சுமார் ஒரு மைல் தொலைவிற்கு இந்த விபத்து பதிவானது.

டல்லாஸ்-ஃபோர்ட் வொர்த் மற்றும் ஆஸ்டின் பகுதிகளில் மோசமான வானிலை நிலவரங்களில் இந்த சம்பவம் ஒன்று. இதில் உறைபனி மழை மற்றும் பனிக்கட்டி ஆகியவை அடங்கும்.

ஒரே இரவில் 300க்கும் மேற்பட்ட விபத்துக்கள் பதிவாகியுள்ளன. 103 பெரிய விபத்துக்கள், தனிவழிப்பாதையில் 133 பெரிய விபத்துக்கள், 86 சிறு விபத்துக்கள், நான்கு சிறு நகர உபகரண விபத்துக்கள், இரண்டு பெரிய நகர உபகரண விபத்துக்கள் மற்றும் ஒரு பெரிய நகர உபகரண விபத்துக்கள் ஆகியவை தனிவழிப்பாதையில் பதிவாகியுள்ளன.

ஃபோர்ட் வொர்த்தில் வியாழக்கிழமை நடந்த விபத்தைத் தொடர்ந்து குறைந்தது 65பேர் உள்ளூர் மருத்துவமனைகளில் மருத்துவ சிகிச்சை கோரியுள்ளனர் என்று தீயணைப்புத் துறைத் தலைவர் ஜிம் டேவிஸ் தெரிவித்தார்.

சம்பவ இடத்தில் ஏராளமான நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதாக மெட்ஸ்டார் ஆம்புலன்ஸ் சேவையின் செய்தித் தொடர்பாளர் மாட் சவாட்ஸ்கி தெரிவித்தார்.

மேலும், ‘விபத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரும் பெரியவர்கள். விபத்து நடந்த இடத்திலிருந்து 36பேர் கொண்டு செல்லப்பட்டனர்’ என கூறினார்.

மேலும், நான்கு அதிகாரிகள் காயமடைந்தனர். அவர்களில் மூன்று பேர் வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கியுள்ளனர். சம்பவ இடத்தில் பணிபுரியும் போது ஒருவர் காயமடைந்ததாக பொலிஸ்துறைத் தலைவர் நொக்ஸ் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மூன்று பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்று சவாட்ஸ்கி கூறினார். சம்பவ இடத்திலிருந்து கொண்டு செல்லப்படாத பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்குமிடம் பேருந்துகள் வந்தன.