Reading Time: < 1 minute

குடியுரிமை / நிரந்தர வதிவிடவுரிமை இல்லாத வெளிநாட்டவர்கள் நாட்டுக்குள் நுழைய கனடா தடை விதிக்கிறது.

இந்த பயண தடையிலிருந்து, ராஜதந்திரிகள், விமான பணியாளர்கள், ஐக்கிய அமெரிக்க பிரஜைகள் ஆகியோருக்கு விலக்களிக்கப்பட்டுள்ளது.

நோய் அறிகுறி இருப்பவர்களும் நாட்டுக்குள் நுழைய முடியாது.

கனடாவுக்கு வெளியிலுள்ள கனேடியர்கள் நாடு திரும்ப உரிய வசதிகள் செய்யப்படும். பணஉதவியும் செய்யப்படும்.

ஏற்றுமதி இறக்குமதி தவிர்ந்து, பயணிகள் விமான சேவைகள் மட்டுப்படுத்தப்படும். நாட்டில் 4 விமான நிலையங்கள் மட்டும் சர்வதேச விமானங்களை உள்ளீர்க்கும்.

நாட்டுக்குள் உலகின் எப்பாகத்திலிருந்து யார் வந்தாலும் அவர்கள் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாவார்கள்.