Reading Time: < 1 minute

ஸ்காபோரோவில் (Scarborough) வில் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) காலை Brimley & Sheppard சந்திப்பின்கு அருகில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பலியானவர் 38 வயதான வடமராட்சி கொற்றவத்தையை பிறப்பிடமாக கொண்ட தீபா சீவரட்ணம் ( Theepa Seevaratnam, November 11, 1980 பிறந்தவர்) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

காலை 9:55 மணியளவில் தனது இல்லத்தில் வைத்து இவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இவருக்கு நெஞ்சுப் பகுதியில் சுடப்பட்டதில் மரணமடைந்ததாக இன்று (சனிக்கிழமை) மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனையில் தெரியவருகின்றது.

இலங்கை – யாழ்ப்பாணம் வடமராட்சி கொற்றாவத்தையைப் பிறப்பிடமாகாக் கொண்ட இரண்டு பெண் பிள்ளைகளின் தாயான இவர் குறிவைக்கப்பட்டு சுடப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்தவர் குறிப்பிட்ட பெண்ணின் தாயார் என குடும்பத்தினர் தெரிவித்தனர். படுகாயமடைந்த நிலையில் தாயார் Sunnybrook வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

துப்பாக்கிதாரி, சுமார் 5’10” உயரமும், சுமாரான உடற்பருமனும் கொண்டவரெனவும், சம்பவத்தின்போது அவர் இளநிற நீளக்காற்சட்டையும் கறுப்பு கோட்டும் அணிந்திருந்தாரெனவும் அவரைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் ரொறோண்டோ கொலைப்பிரிவுடன் பின்வரும் முறைகளில் தொடர்பு கொள்ளலாம்:

Ref.: Case#: 2020-524758

(Homicide) 416-808-7400

Crime Stoppers (anonymously): 416-222-TIPS (8477)

Online at www.222tips.com

Message to CRIMES (274637)

For more news: TPSnews.ca.

Constable Alex Li, Corporate Communications, for Detective Sergeant Terry Browne, Homicide