Reading Time: < 1 minute உக்கிரேன் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு இடையிலான போர் இறுதியில் ராஜதந்திர வழிமுறைகளில் தீர்க்கப்படும் என கனடிய வெளிவிவகார அமைச்சர் மெலய்ன் ஜோலி தெரிவித்துள்ளார். எனினும் உக்கிரேனில் மீளவும் முரண்பாடுகள் ஏற்படாது இருப்பதனை தடுப்பதற்கு நீண்ட காலத்திற்கு கனடா உதவி செய்ய நேரிடும் என தெரிவித்துள்ளார். யுத்தம் ஆரம்பமாகி பதினெட்டு மாதங்கள் பூர்த்தியாகி உள்ள நிலையில் அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். உக்ரேனுக்கு நீண்ட கால அடிப்படையில் கனடாவும் நேட்டோRead More →

Reading Time: < 1 minute கனடாவின் ஒன்றாரியோ ஹெலிகொப்டர் விபத்தில் காணாமல் போன இரண்டு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. சினூக் ஹெலிகொப்டர் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியிருந்தனர். இந்த ஹெலிகொப்டரில் நான்கு பேர் பயணம் செய்திருந்தனர். கனடிய விமானப்படைக்குச் சொந்தமான இந்த ஹெலிகொப்டரில் பயணம் செய்த இருவர் காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். ஏனைய இரண்டு பேர் காணாமல் போயிருந்த நிலையில் ஒட்டாவா நதியில் இருவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது இந்த ஹெலிகொப்டர்Read More →

Reading Time: < 1 minute கனடாவின் பகுதியில் கடையொன்றை உடைத்து மதுபானம் களவாடப்பட்டுள்ளது. கனடாவின் முன்னணி மதுபான விற்பனை நிறுவனங்களில் ஒன்றில் இவ்வாறு மதுபானம் களவாடப்பட்டுள்ளது. கடையை உடைத்து அதிலிருந்து சுமார் 1500 டொலர் பெறுமதியான மதுபான வகைகள் கனவாடப்பட்டுள்ளன. றொரன்டோவின் காக்ஸ்வெல் மற்றும் குயின் வீதிகளுக்கு அருகாமையில் அமைந்துள்ள கடையில் அதிகாலை வேளையில் இந்த கொள்ளை சம்பவம் இடம் பெற்றுள்ளது. இரண்டு நபர்கள் கடையை உடைத்து உள்ளே புகுந்து சில வகை மதுபான போத்தல்களைRead More →

Reading Time: < 1 minute கனடாவில் வாடிக்கையாளர்களுக்கு தீங்கிழைத்த நிறுவனம் ஒன்றின் மீது 50 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முன்னணி பேக்கரி உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான கனடா பிரட் நிறுவனத்தின் மீது இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. விலை நிர்ணய சதியில் ஈடுபட்டதாக இந்த நிறுவனத்தின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டினை நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. கனடிய வரலாற்றில் விலை நிர்ணய மோசடியில் ஈடுபட்டமை தொடர்பில் நிறுவனம் ஒன்றின் மீது விதிக்கப்பட்ட அதிகட்ச அபராத தொகைRead More →

Reading Time: < 1 minute கனடாவில் சுமார் ஐந்து லட்சம் டாலர் பெருமதியான களவாடப்பட்ட நகைகளை யோர்க் பிராந்திய போலீசார் கைப்பற்றியுள்ளனர். இரண்டு சந்தேக நபர்களிடம் இருந்து இந்த தங்க ஆபரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. டொரன்டோவைச் சேர்ந்த 26 வயதுடைய நிக்கோலாய் ஒயின்ஸிகியூ மற்றும் இசாயுரா எலெசான்றோ ஆகிய இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். டொரண்டோ பெரும்பாகம் மற்றும் ஹமில்டன் ஆகிய பகுதிகளில் இந்த இருவரும் பல சந்தர்ப்பங்களில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளில் மூலம் தெரியRead More →

Reading Time: < 1 minute ஒன்றாரியோவில் கெரிசன் பிடாவாவா பகுதியில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் இரண்டு கனடிய விமானப்படையினரை காணவில்லை. கனடிய விமானப் படைக்குச் சொந்தமான சீ.எச்.-147 ஹெலிகெப்டர் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த ஹெலிகொப்டரில் மொத்தமாக நான்கு பேர் பயணம் செய்துள்ளனர். விமானம் கீழே வீழ்ந்தாகவும் இருவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸாரும், விமானப்படையினரும் தீயணைப்புப் படையினரும் கூட்டாக இணைந்து காணாமல் போன படை வீரர்களை கண்டு பிடிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். ஒட்டாவாRead More →

Reading Time: < 1 minute கனடாவின் மானிட்டோபா பகுதியில் ஐந்து நாள் இடைவெளியில் மூன்று சிறுவர்கள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். ஐலண்ட் லேக் பகுதியில் 23 மாதங்களான சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான். பழங்குடியின சமூகம் வாழும் கார்டன்சில் ஃபர்ஸ்ட் நேசன் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. நீரில் மூழ்கிய சிறுவனுக்கு வினிபெக் வைத்தியசாலையில் மூன்று நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான். குறித்தRead More →

Reading Time: < 1 minute கனடாவின் பிக்கரிங் பகுதியில் பல வாகனங்கள் தீ விபத்துக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 401 இலக்க அதிவேக நெடுஞ்சாலையில் இந்த விபத்து சம்பவம் பதிவாகியுள்ளது. தீ பற்றி கொண்ட வாகனங்களின் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக தீயணைப்பு படையினர் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தப் பகுதியில் பாரியளவில் தீ பற்றி எரிவதாகவும் கருப்பு புகை பரவி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சில சாரதிகள் அந்தப் பகுதியில் வெடிப்புச் சத்தங்களைRead More →

Reading Time: < 1 minute கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு, கனேடிய நிரந்தரக் குடியிருப்பு அனுமதிக்கு விண்ணப்பிப்போரின் biometrics சேகரிப்பு தொடர்பில், தனது கொள்கையில் முக்கிய மாற்றம் ஒன்றைச் செய்துள்ளது. கனடாவில் நிரந்தரக் குடியிருப்பு அனுமதிக்கு விண்ணப்பிப்போர், தங்கள் கைரேகைகள் மற்றும் தங்கள் முகத்தைக் காட்டும் புகைப்படம் ஆகியவற்றை, கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பிடம் சமர்ப்பிக்கவேண்டும். இவைதான் Biometrics என அழைக்கப்படுகின்றன. அவற்றை சமர்ப்பிப்பதற்கான கட்டணம் 85 கனேடிய டொலர்கள்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் தம்பதி தம்பதியினர் விசித்திரமான அனுபவம் ஒன்றை எதிர் நோக்க நேரிட்டுள்ளது. 12 நாட்கள் ஐரோப்பிய சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு வீடு திரும்பிய குறித்த தம்பதியினர் தமது காரில் சிலர் தங்கி இருந்ததனை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். வீடு திரும்பி காரை பார்த்த போது அந்த காரில் பல்வேறு பொருட்கள் காணப்பட்டதாகவும் எல்லா இடங்களிலும் குப்பைகள் போடப்பட்டிருந்ததாகவும் தம்பதியினர் தெரிவிக்கின்றனர். தமது காரை, யாரோ குடியிருப்பாக மாற்றி உள்ளனர் என்பதுRead More →

Reading Time: < 1 minute கனடாவின் பிக்கரிங் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 17 வயது சிறுவன் கொல்லப்பட்டுள்ளான். ஒன்றாரியோவின் பிக்கரிங் கிங்ஸ்டனில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளான். தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை. வாகனத்திலிருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தினால் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.Read More →

Reading Time: < 1 minute புலம்பெயர்தல் என்பது நீண்ட காலமாகவே நிகழ்ந்து வரும் ஒரு நிகழ்வாகும். மனித இனத்தில் மட்டுமல்ல, அது பறவை இனங்களில் கூட காணப்படும் ஒரு இயற்கை நிகழ்வு. இன்று புலம்பெயர்தல் எதிர்மறையான ஒன்றாக சில நாடுகளால் காட்டப்படுகிறது. ஆனால், உலகம் என்னும் சமுதாயத்திற்கு புலம்பெயர்தல் என்பது நன்மை பயக்கும் ஒரு விடயமாகும். புலம்பெயர்வோர் ஒரு நாட்டுக்கு புலம்பெயர்ந்து அங்கு வேலை செய்வதால் அவர்களுக்கு வருவாய் கிடைக்கிறது. அதே நேரத்தில், அந்த நாட்டின்Read More →

Reading Time: < 1 minute கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் மித மிஞ்சிய அளவில் மருந்து மாத்திரைகளை உட்கொள்ளுதல் அல்லது சட்டவிரோதமாக போதை மாத்திரைகளை உட்கொள்ளுதல் ஆகிய காரணிகளினால் ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளன. கடந்த மே மாதம் 176 பேர் இவ்வாறு உயிரிழந்து உள்ளதாகவும் இதன் அடிப்படையில் மொத்தமாக மே மாதம் இறுதி வரையில் ஒழுங்கு படுத்தப்படாத மருந்து வகைகள் அதிக அளவில் பயன்படுத்தியதனால்Read More →

Reading Time: < 1 minute கனடாவின் ஆல்பர்ட்டா மாகாண மக்களுக்கு எரிபொருள் தொடர்பில் வழங்கப்பட்டு வந்த சலுகை மேலும் நீடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாகாண மக்கள் குறைந்த விலைக்கு எரிபொருட்களை கொள்வனவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாகாண முதல்வர் டேனியல் ஸ்மித் இந்த விடயத்தை இன்றைய தினம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். எரிபொருள் தொடர்பிலான வரியை தற்காலிக அடிப்படையில் ரத்து செய்வதன் மூலம் இந்த சலுகை மக்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த வரி சலுகைRead More →

Reading Time: < 1 minute கனடாவின் எடிசன் பகுதியில் மழை மற்றும் வெள்ளம் காரணமாக அவசர உள்ளூர் அவசர நிலைமை அறிவிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ள நிலைமை காரணமாக தாழ்நிலப் பகுதிகளில் வாழ்ந்து வரும் மக்கள் அங்கிருந்து வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. மிகக் குறுகிய காலப்பகுதியில் 85 மில்லி மீட்டர் அளவில் குறித்த பகுதியில் மழை பெய்துள்ளது. மழை வெள்ளம் காரணமாக தொலைபேசி மற்றும் இணைய வசதிகள் செயல்படவில்லை எனவும் அனேகமான வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. வெள்ளம்Read More →

Reading Time: < 1 minute கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் இந்த ஆண்டின் இதுவரையில் வாகன விபத்துக்கள் காரணமாக 150 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஒன்றாரியோ மாகாண பொலிஸார் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளனர். இந்த ஜூன் மாதத்தில் கடந்த 11ம் திகதி வரையில் 18 பேர் வாகன விபத்துக்களினால் உயிரிழந்துள்ளனர். கடந்த 2022ம் ஆண்டில் வாகன விபத்துக்களினால் 359 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 16 ஆண்டு காலப் பகுதியில் மாகாணத்தில் பதிவான அதி கூடிய வாகன விபத்து மரணRead More →