Reading Time: < 1 minute

நோர்த் யோர்க் பகுதியில் கூரிய ஆயுதத்ததால் குத்தப்பட்டு நேற்று செவ்வாய்க்கிழமை 70 வயதான ஆண் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Tamil Business Directory

காலை 11.30 மணிக்கு இடம்பெற்ற இந்தச் சம்பவம் குறித்து பொலிஸ் அவசர பிரிவுக்கு அறிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திலேயே 70 வயதான நபர் சடலமாகக் காணப்பட்ட நிலையில், மற்றவர் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் தன்னைத் தானே குத்திக் காயப்படுத்திக்கொண்டதாக நம்பப்படும் சந்தேக நபர் ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்த மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக ரொரண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.