Reading Time: < 1 minute

கனடாவில் சுமார் 25 மில்லியன் டொலர் பெறுமதியான போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

Tamil Business Directory

பீல் பிராந்திய பொலிஸார் குறித்த போதைப் பொருட்களை மீட்டுள்ளனர்.

தீவிர விசாரணைகள் மற்றும் சுற்றி வளைப்புக்கள் மூலம் இவ்வாறு பாரியளவிலான போதைப் பொருட்கள் மீட்கப்பட்டதுடன், சிலர் கைது செய்யப்பட்டுள்ளன.

இந்த போதைப் பொருள் மீட்பு விவகாரம் தொடர்பில் பீல் பிராந்திய பொலிஸார் நாளைய தினம் அதிகாரபூர்வ ஊடக சந்திப்பு மூலம் அறிவிக்கத் திட்டமிட்டுள்ளனர்.

பீல் பிராந்திய பொலிஸாரினால் மீட்கப்பட்ட மிக அதிகளவான போதைப் பொருள் தொகை இதுவெனத் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வறெனினும், இந்த போதைப் பொருள் மீட்பு மற்றும் கைதுகள் பற்றிய மேலதிக விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.